Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்‌ஷன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூர் செயலாளர் சீமான் மரைக்காயர், மீனவர் பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் சீனி காதர்மொய்தீன், மீனவர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் பக்கர், மண்டபம் பேரூராட்சி ஐடி பிரிவு இணைச் செயலாளார் ஹமீது அப்துல் ரகுமான் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் அனலாகத் தகித்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 23 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார்.

Edappadi Palaniswami Expels Four AIADMK functionaries from Ramanathapuram

அதன்படி, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிமுகவினர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வழங்கி வருகின்றனர். கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர், விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர். விருப்ப மனு வழங்கப்பட்டு வருவதால் அதிமுகவினர் தேர்தல் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவர்கள் கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதால் கட்சியில் இருந்து ஈக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருக்கத்தில் அதிமுக நிர்வாகிகள் 4 பேர் நீக்கப்பட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தலைமைக் கழகம் சார்பில் எடப்பாடி பழனிசாமியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாக ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த KMA. சீமான் மரைக்காயர், (மண்டபம் பேரூராட்சிக் கழகச் செயலாளர்) L. சீனி காதர் மொய்தீன் (மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர், மண்டபம் பேரூராட்சிக் கழக மாவட்டப் பிரதிநிதி) M.A.பக்கர், (மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர்) S. ஹமீது அப்துல் ரகுமான் மரைக்காயர், (மண்டபம் பேரூராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்) ஆகியோர், இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சி நிர்வாகிகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+