அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா! ரெய்டு -வழக்கு பற்றியெல்லாம் பொருட்படுத்தாத எடப்பாடி பழனிசாமி!
சென்னை: வழக்கு, ரெய்டுகளுக்கு எல்லாம் அஞ்சினால் அரசியல் செய்ய முடியுமா என எதற்கும் துணிந்துவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி.
இந்த தகவலை எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசிய பிறகு வழக்கறிஞர் மணி செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் விவரித்துள்ளார். மீண்டும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் அவர் 100% உறுதியாக நிற்கிறார் என வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் அரசியலில் உயிர்பிக்கும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவது எடப்பாடி பழனிசாமிக்கு சிறிதும் பிடிக்கவில்லை என்றும் இதற்காகவா அவர் இவ்வளவு நாட்கள் போராடி கட்சியில் தனது ஆளுமையை நிரூபித்தார் எனவும் வழக்கறிஞர் தமிழ் மணி வினவியுள்ளார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்தது அவசரப்பட்டோ, உணர்ச்சிவசப்பட்டோ எடுத்த முடிவில்லை என்றும் நீண்ட நாட்களாக யோசித்து, கலந்து ஆலோசித்து தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்ட முடிவு என வழக்கறிஞர் தமிழ் மணி கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி எடுத்த தனிப்பட்ட முடிவாக இருந்தால் இதனை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பிருந்திருக்கும் ஆனால் அதிமுகவில் தீர்மானமே நிறைவேற்றியிருப்பதால் தனக்கு தெரிந்து மீண்டும் கூட்டணி தொடர வாய்ப்பே இல்லை என வழக்கறிஞர் மணி கூறுகிறார்.
அரசியலில் எடப்பாடி பழனிசாமி கைதேர்ந்தவராக மாறிவிட்டார் என்றும் அவ்வளவு தெளிவாக புள்ளி விவரங்களை கையில் வைத்திருக்கிறார் என வழக்கறிஞர் மணி தெரிவித்தார். அரசியலில் இனி எந்த பூச்சாண்டிக்கும் எடப்பாடி பழனிசாமி பயப்பட்ட மாட்டார் என்பதே தனது கணிப்பு என மிக ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் பாஜகவுக்கு அதிமுகவில் கதவு அடைக்கப்பட்டு விட்டது என்பதையும் மீண்டும் எத்தனை முறை தட்டினாலும் அதிமுக கூட்டணிக் கதவை திறக்க வாய்ப்பே இல்லை என்பதியும் வழக்கறிஞர் தமிழ்மணி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் 3 நாட்களுக்கு முன்னர் 1 மணி நேரம் சந்தித்து பேசிய பிறகு அவர் மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார்.
இதனிடையே அதிமுக கூட்டணியில் பாஜக தொடரக்கூடும் என்ற வகையில் கிருஷ்ணசாமி, வி.பி. துரைசாமி போன்றோர் இன்னும் நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்து வருவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications