20 சேவைக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்வா? கொதித்த எடப்பாடி.. ஸ்டாலினுக்கு போன ‛டிமாண்ட்’
சென்னை: தமிழகத்தில் 20 வகை சேவைக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஸ்டாலின் அரசு உடனடியாக இந்த முத்திரைத்தாள் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தது முதல் பத்திரப்பதிவு கட்டணம் என்பது தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் பத்திரப்பதிவு செய்யும் மக்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையின் 20 வகையான சேவைகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் என்பது உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது தமிழக பத்திரப்பதிவு துறையில் வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மெண்ட் உள்பட 20 வகை சேவைகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் என்பது கிடுகிடுவென அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முத்திரைத்தாள் கட்டணம் மூலம் அரசுக்கு வருவாய் என்பது கிடைக்கும்.
இந்நிலையில் தான் தமிழகத்தில் இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 என இருந்தது. தற்போது அந்த கட்டணம் தற்போது ரூ.100, 200, 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் உறுதிமொழி ஆவணத்திற்கு ரூ.20 என இருந்த முத்திரைத்தாள் கட்டணம் ரூ.200 வரை அதிகரித்துள்ளது. இப்படி 20 வகை சேவைக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை குறிப்பிட்டு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியும் தமிழக அரசை கண்டித்துள்ளார். பத்திரப்பதிவு துறையின் 20 வகை சேவைகளுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்தியதாக வரும் தகவலால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கோபமடைந்துள்ளார். அதுமட்டுமின்றி உடனடியாக முத்திரைத்தாள் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛பத்திரப்பதிவு துறையின் 20 வகையான சேவைகளுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை விடியா திமுக அரசு உயர்த்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. சொத்து என்ற சாமானியனின் கனவை சாத்தியப்படுத்த உறுதுணையாக இருக்கவேண்டிய அரசே, முத்திரைத் தாள் கட்டண உயர்வு மூலம் முட்டுக்கட்டை போடுவது கடும் கண்டனத்திற்குரியது. தனது நிர்வாகத் திறமையின்மையால் ஏற்படும் பொருளாதார பாரத்தை மக்களின் தலைகளில் ஏற்றும் ஸ்டாலினின் திமுக அரசு, உடனடியாக முத்திரைத் தாள் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.
-
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!











Click it and Unblock the Notifications