ஆளுநரை நாளை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி! திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த அதிமுக! அடுத்தது என்ன?
சென்னை: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி புகார் அளிக்க நாளை எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ரவியை சந்திக்கவுள்ள நிலையில், திருமாவளவனும் அதில் பங்கேற்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பண்டியராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
திருமாவளவன் திமுக கூட்டணியில் உள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அவருக்கு அழைப்பு விடுத்திருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே மதுவிலக்கை வலியுறுத்தி அதிமுக போராட்டங்களை முன்னெடுத்தால் அதில் விசிகவும் பங்கெடுக்கும் என திருமாவளவன் கூறியிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், கர்நாடக தேர்தல் முடிவுகளுக்கு பிறகாவது பாஜகவுடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருமாவளவன் அக்கறையோடு அட்வைஸ் செய்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் திமுகவை மட்டுமே நம்பி தாங்கள் இல்லை என்பதை திருமாவளவனும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளையும் தங்களால் வளைக்க முடியும் என்பதை அதிமுகவும் உணர்த்த ஆரம்பித்துள்ளது.
இதனிடையே மதுவிலக்கை மையப்படுத்தி அரசியல் கட்சிகளிலிருந்து எழும் கோரிக்கை குரல்களை திமுக தலைமை சீரியஸாக கவனித்து வருகிறது.
மதுவிலக்கு என்ற குறிக்கோளுக்காக அதிமுக, பாமக, உட்பட எந்தக் கட்சியோடும் இணைந்து செயலாற்றத் தயார் என 2 நாட்களுக்கு முன்பு வேல்முருகன் கூறியிருப்பதும் கருத்தில் கொள்ள வேண்டியதாகும்.












Click it and Unblock the Notifications