Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சமூக நிதி பேசும் முதல்வர் ஸ்டாலின்.. திரௌபதி முர்முவை ஏன் ஆதரிக்கவில்லை?" எடப்பாடி பழனிசாமி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்தார்.

Recommended Video

    ஜனாதிபதி தேர்தலில் உங்கள் சகோதரியை ஆதரியுங்கள்! அதிமுகவிடம் ஆதரவு கோரிய திரௌபதி முர்மு

    நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். அதேபோல எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்.

    சென்னையில் திரௌபதி முர்மு

    சென்னையில் திரௌபதி முர்மு

    குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் பல மாநிலங்களுக்கும் சென்று பல்வேறு கட்சியினரை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். யஷ்வந்த் சின்கா இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிய நிலையில், பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று சென்னை வந்துள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    அதிமுக தலைவர்களை நேரில் சந்தித்து திரௌபதி முர்மு ஆதரவு கோரினார். அவருக்கு எடப்பாடி பழனிசாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அதன் பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஜனாதிபதி வேட்பாளராகத் திரௌபதி முர்முவுக்கு அதிமுக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனாதிபதி வேட்பாளராகத் திரௌபதி முர்முவை அறிவித்தது மகிழ்ச்சி தருகிறது.

     ஏமாற்றும் ஸ்டாலின்

    ஏமாற்றும் ஸ்டாலின்

    பழங்குடி இனத்தைவரை ஜனாதிபதியாக்கும் ஜெயலலிதாவின் கனவு நிறைவேறும் தருணம். பிரதமர் மோடியின் வரவேற்கத்தக்க இந்த அறிவிப்பை அதிமுக முழு மனதுடன் ஆதரிக்கிறது. சமூக நிதி பேசும் முதல்வர் ஸ்டாலின் திரௌபதி முர்முவை ஏன் ஆதரிக்கவில்லை. திரௌபதி முர்முவை ஆதரிக்காமல் சமூக நீதி திராவிட மாடல் எனப் பேசி ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறார்.

    திமுக சூழ்ச்சி

    திமுக சூழ்ச்சி

    திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சியால் தான் 2012 குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ.சங்மாவால் வெற்றி பெற முடியவில்லை. வாய் அளவிலும் ஏட்டு அளவிலும் சமூக நிதி பேசும் கட்சிகளுக்கு மத்தியில் அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்து குடியரசுத் தலைவராக்க உதவியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

     திரௌபதி முர்முவுக்கு பாராட்டு

    திரௌபதி முர்முவுக்கு பாராட்டு

    ஏழை எளியோர், பழங்குடியினர் நலனுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் திரௌபதி முர்மு. ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் திரௌபதி முர்முவுக்கு உண்டு. அவருக்குத் தலைசிறந்த நிர்வாகத் திறனும் அனுபவமும் உள்ளது. திரௌபதி முர்மு நமது நாட்டின் தலைசிறந்த குடியரசுத் தலைவராக நிச்சயம் இருப்பார். அதிமுகவின் முழு ஆதரவும் திரௌபதி முர்முவுக்கு இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+