Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏசி பயன்பாடு அதிகம் உள்ள வீடுகளில் மின் கட்டணத்தை குறைக்க சூப்பர் வழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏசி பயன்பாடு அதிகம் உள்ள வீடுகளில் மின் கட்டணத்தை குறைக்க வழிகள் உள்ளதா என்று பலரும் தேடுகிறார்கள். அதற்கு நிச்சயம் வழிகள் உள்ளன. ஆனால் மத்திய அரசே அதற்கு ஒரு நல்ல தீர்வை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதுதான் சோலார் பேனலுடன் கூடிய மின் இணைப்பு. வீட்டில் மின் இணைப்பு வைத்துள்ளர்கள், மானியத்துடன் சோலார் பேனல் நிறுவினால் மிகப்பெரிய அளவில் மின் கட்டணத்தை குறைக்க முடியும்.

வீடுகளில் உள்ள மின்சார மீட்டரில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ரீடிங் எடுக்கப்படுகிறது. இதன்படி மின்சார கட்டணத்தை செலுத்துகிறோம். பொதுவாகவே மின்சார செலவை அதிக அளவில் ஆக்குவது முக்கியமாக ஏசி (ஏர் கண்டிஷனர்கள்), மற்றும் ஃபேன், வாட்டர் ஹீட்டர், மிக்ஸி, கிரைண்டர், குளிர்சாதன பெட்டி, அயர்ன் பாக்ஸ், கம்ப்யூட்டர், மின்சார அடுப்பு போன்றவை அதிக மின்சார நுகரும் சாதனங்களாக உள்ளன.

electricity bill ac

இதனால் மின்சார கட்டணத்தை குறைக்க ஏசியை குறைவாக பயன்படுத்த வேண்டும். அதேபோல் ஏசி மற்றும் குளிர்சாதன பெட்டியைப் பொறுத்தவரை இன்வெர்ட்டர்களைப் பயன்படுத்தலாம். அதிக மின்சாரம் எடுக்கும் மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதுதை குறைப்பது, அலங்கார விளக்குகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதை குறைப்பதன் மூலம் அதிக மின்சார கட்டணத்தை தவிர்க்கலாம்.

அதேபோல் வீட்டில் மின்சார பயன்பாட்டைச் சேமிக்கஎல்.ஈ.டி பல்புகள் போன்ற குறைந்த வாட் மின் பல்புகளைப் பயன்படுத்தலாம். அதேபோல் ஃப்ரிட்ஜ், ஏ.சி. போன்ற பொருட்களில் 5 நட்சத்திர மதிப்பிடப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்தலாம். அதேபோல் சமைப்பதற்கு மின்சார அடுப்பை பயன்படுத்தாமல் கேஸ் அடுப்பு பயன்படுத்தலாம். குளியலறையில் சாதாரண மின்சார நீர் ஹீட்டருக்கு பதில் சூரிய நீர் ஹீட்டர் பயன்படுத்தலாம். ஏசியை பொறுத்தவரை ஐந்து நட்சத்திர மதிப்பீடு கொண்ட ஒன்றரை டன் ஏசியை ஒரு மணி நேரம் பயன்படுத்தினால் தான் 1.5 யூனிட் வரும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என 60 நாட்கள் ஏசியை பயன்படுத்தினால் 480 மணி நேரத்திறகு 720 யூனிட் ஓடியிருக்கும்.. ஏசிக்கு மட்டுமே 3600 ரூபாய் வரை மின்சார கட்டணம் வரும்.

இந்த பில்களை குறைக்க வேண்டும் என்றால், வீட்டில் சோலார் பேனல்கள் அமைக்கலாம். மாதாந்திர மின்சார பில் இல்லாமல் உங்கள் மின்சாரத்தை இலவசமாகப் பெற முடியும். வீடுகளை பொறுத்தவரை 4 கிலோவாட் சோலார் மின் அமைப்பு 16 சோலார் பேனல்கள் அரசாங்க மின்சார வாரிய கட்டத்துடன் இணைக்கப்படும். இதனால் இரவில் தினமும் ஏசியைப் பயன்படுத்தினாலும், மின்சார பில் மிகக் குறைவாகவே வரும் . சோலார் பேனல் பயன்படுத்தினால் அதிகப்படியான மின் கட்டணத்தை அடியோடு குறைக்க முடியும். அதேபோல் அதிகப்படியான நீர் மோட்டார் பயன்பாடு உள்ள அடுக்குமாடி வீடுகளில் இடங்களில் சோலார் பவர் மூலம் மோட்டார்களை இயக்குவதன் மூலம் மின் கட்டணத்தை சேமிக்கலாம். வீடுகளின் கூரையில் சோலார் தகடுகளை அமைக்க ஒரு கோடி குடும்பங்களுக்கு தலா ரூ78,000 வரை மானிய உதவியும் கிடைக்கும்.

சூரிய எரிசக்திகான சோலார் பேனல்களை வீடுகளில் மேல் கூரைகளில் நிறுவ, திட்டப்பணியை பொறுத்து மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. 2 கிலோவாட் திறன் கொண்டஅமைப்புக்கு 60% மானியமும், 2 முதல் 3 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பேனல் அமைப்புகளுக்கு 40% நிதியுதவி கிடைக்கும் . அதாவது, 3 கிலோவாட்டுக்கு ரூ.78,000 மானிய உதவியும், 2 கிலோவாட் திறன் கொண்ட சோலார் அமைப்புக்கு ரூ.60,000 மானியமும், 1 கிலோவாட் திறன் கொண்ட அமைப்புக்கு ரூ.30,000 மானியமும் கிடைக்கும். எனினும், ஏற்கனவே தங்கள் வீடுகளில் சோலார் சிஸ்டம் வைத்திருக்கும் நுகர்வோருக்கு இந்த மானியம் கிடைக்காது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+