‛மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்யக்கூடாது’’..தேர்தல் ஆணையம் - கோர்ட்டுக்கு ஓடும் செல்வபெருந்தகை
சென்னை: பிரதமர் மோடி 3 நாள் பயணமாக மே 30ம் தேதி தமிழகம் வருகிறார். மே 30 முதல் ஜுன் 1 வரை அவர் கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி இத்தகைய தியானம் மேற்கொள்வது என்பது தேர்தல் விதிமீறலாகும். இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை நாட உள்ளதாக அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 6 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. 7 வது மற்றும் கடைசி கட்ட லோக்சபா தேர்தல் என்பது ஜுன் 1ல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தான் பிரதமர் மோடி களமிறங்கி உள்ள வாரணாசி தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

அதன்பிறகு ஜுன் 4ல் நாடு முழுவதும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி இறுதிக்கட்ட லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த பிரசாரம் என்பது வரும் 30ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.
இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடிக்கும் கையோடு பிரமதர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று பிரதமர் மோடி தியானம் மேற்கொ்ள உள்ளார். அதாவது நாளை மறுநாள் டெல்லியில் இருந்து விமானத்தில் பிரதமர் மோடி திருவனந்தபுரம் வருகிறார். அதன்பிறகு ஹெலிகாப்டரில் அவர் கன்னியாகுமரி வருகிறார். அங்கு படகு மூலம் விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு சென்று பிரதமர் மோடி தியானம் செய்துவிட்டு ஜுன் 1ல் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.
‛நிறைவேறாத வேண்டுதல்’.. மோடியை தொடர்ந்து மே 30ல் தமிழகம் வரும் அமித்ஷா! திருமயத்துக்கு விசிட்
கடந்த 2019 லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்று தியானம் செய்த நிலையில் இந்த முறை கன்னியாகுமரி வருகை தர உள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவது தேர்தல் விதிமீறல் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும் அதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக செல்வபெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: மே 30 முதல் ஜூன் 1 வரை நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது.
மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்பாக குமரி முனையில் தியானம்!
வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் எக்ஸ் பதிவில் செல்வபெருந்தகை தமிழக தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தை ‛டேக்’ செய்துள்ளார்.
-
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications