கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற.. மூத்த தமிழறிஞர் வ.ஜெயதேவன் காலமானார்!
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையின் முன்னாள் தலைவரும், பிரபல அகராதியில் ஆய்வாளருமான மூத்த தமிழர் வ.ஜெயதேவன் (79) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.
இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், ஜெயதேவன் மறைவு செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன் என்று கூறியுள்ளார்.

"பேராசிரியர் திரு V. ஜெயதேவன் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.
அவர் சிறந்த தமிழ்ப் பேராசிரியர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் புத்துணர்ச்சியை ஊட்டியவர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தைச் சீரமைத்து மீண்டும் செயல்படுத்துவதற்குப் பெருந் துணையாக இருந்தவர். அண்மையில் நாடகவியல் களஞ்சியத்தை வெளியிட்டதில் அவர் அருந்துணையாக இருந்தார்.
அவர் மறைவால் வருந்தும் அவருடைய குடும்பத்தினருக்கும் எண்ணற்ற நண்பர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைவதாக" என்று தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications