பொன்னியின் செல்வன்..லைகா ஆபீசில் அமலாக்கத்துறை சோதனை! அதிகாலையில் பரபரப்பு..காரணம் என்ன?
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் வசூலைப் பார்த்து வருமான வரி சோதனை வரலாம் என்று நடிகர் பார்த்திபன் சொன்ன நிலையில் லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் லைகா. 'கத்தி' 'கோலமாவு கோகிலா' 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளது. தொழிலதிபர் சுபாஷ்கரனுக்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பாமக எம்எல்ஏ ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரன் செயல்பட்டு வருகிறார்.

கமலின் இந்தியன் 2 ரஜினி நடிக்கும் லால் சலாம், அஜித் நடிக்கும் விடாமுயற்சி உள்ளிட்ட பல படங்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படமானது 300 கோடி வசூல் செய்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய அடையாறு, தி.நகர், காரப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை மேற்கொண்டனர். சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை ராணுவத்தின் பாதுகாப்போடு அமலாக்கத்துறையினர் இந்த சோதனையை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications