Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைதாவோம் என தெரிந்தே மெமோவை வாங்க மறுத்தார் செந்தில் பாலாஜி.. பரபரப்பை கிளப்பிய அமலாக்கத்துறை வாதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே மெமோவை வாங்க அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்துவிட்டார், நேற்று வரை ஆரோக்கியமாகவே இருந்தார் என அமலாக்கத்துறை பரபரப்பான வாதத்தை வைத்துள்ளது.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Enforcement directorate argument in court against minister senthil balaji

அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை மனு அளித்தது. அதேபோல, திமுக தரப்பிலும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி திமுக தரப்பும் செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்ய உத்தரவிட வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பும் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வாதம் செய்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கான மெமோவை வாங்க மறுத்தார். கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே மெமோவை வாங்க செந்தில் பாலாஜி மறுத்துவிட்டார் என அமலாக்கத்துறை வாதம் வைத்துள்ளது.

ரிமாண்ட்டை நீக்க கோரிக்கை வைக்க முடியாது, ஜாமீன்தான் கேட்க முடியும். கைது குறித்து, செந்தில் பாலாஜி சகோதரருக்கும், மனைவிக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. எனவே எந்த வித இடைக்கால நிவாரணமும் அளிக்கக்கூடாது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்ற விசாரணை முறைச் சட்ட விதிகள் பொருந்தாது. செந்தில் பாலாஜி ரிமாண்ட் செய்யப்பட்டு விட்ட நிலையில் அதை நிராகரிக்க கோர முடியாது. விசாரணைக்கு செந்தில் பாலாஜி சரிவர ஒத்துழைக்கவில்லை.

செந்தில் பாலாஜி நேற்று வரை நன்றாகத்தான் இருந்தார். இன்று திடீரென உடல்நலக்குறைவு என்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் நாங்களே உரிய சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம். செந்தில் பாலாஜிக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனர். அதற்கான அவசியம் இல்லை என்று நாங்கள் கூறுகிறோம்.

செந்தில் பாலாஜி உடல்நலம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் மருத்துவர் அறிக்கையை நம்ப முடியாது. செந்தில் பாலாஜி உடல்நிலையை கண்காணிக்க சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்." என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+