Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு.. சென்னை, கரூரில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சி காலத்தில் 2011- 2015ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டது.

Enforcement directorate raid at Senthil Balajis house

இந்த வழக்கை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும் சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதை ஏற்று செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால் வழக்குப் பதிவு செய்யாத மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகல் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு மனு தாக்கல் செய்தது.

அது போல் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரியும் செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு குறித்து கடந்த 16 ஆம் தேதி விசாரணை நடத்திய சிறப்பு நீதிபதிகள் அமர்வு பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். பண மோசடி வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்கவும், புகார்களை விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனால் அமலாக்கத் துறையினர் எப்போது வேண்டுமானாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் சென்னை, கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அது போல் சென்னை அபிராமபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் இறுதியில் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். இந்த நிலையில் அமலாக்கத் துறை ரெய்டு நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+