Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜிக்கு எதிராக 3000 பக்க ஆவணங்கள், 120 பக்க குற்றப்பத்திரிகை.. மிரள வைத்த அமலாக்கத்துறை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்கங்கள் மற்றும் 3,000 பக்கத்திற்கு ஆதாரங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.

சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கடந்த ஏழாம் தேதி முதல் 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

Enforcement directorate submits chargesheet against senthil balaji

அதன்படி, செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை நகல்கள், பினாமி சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில் 1000-க்கும் மேற்பட்ட கேள்விகள் செந்தில் பாலாஜியிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

5 நாட்கள் காவல் முடிவடைந்ததை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறையினர் துன்புறுத்தினார்களா என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, துன்புறுத்தவில்லை என செந்தில் பாலாஜி பதிலளித்தார்.

அப்போது அவரை மீண்டும் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க உத்தரவிடக் கேட்டு அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்க குற்றப் பத்திரிகையுடன், 3,000 பக்க ஆதார ஆவணங்களை டிரங்க் பெட்டியில் வைத்து, அமலாக்கத்துறையினர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்தக் குற்றப் பத்திரிக்கையில் முழுக்க முழுக்க செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம் பெற்றிருப்பதாகவும் அவர் பெயர் தவிர அவரது சகோதரர் அசோக் குமார் உட்பட வேறு யார் பெயரும் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

Enforcement directorate submits chargesheet against senthil balaji

இந்தக் குற்றப் பத்திரிகையில் செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள், சட்டவிரோத வங்கிப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குற்றப் பத்திரிக்கை நகல் செந்தில் பாலாஜிக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+