இரட்டை இலை வழக்கு.. திடீர் திருப்பம்.. மாற்றி மாற்றி பேசும் சுகேஷ்.. டிடிவி தினகரனுக்கு சம்மன்
சென்னை: இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் ஏப்ரல் 8 ஆம் தேதி ஆஜராக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர் கே நகருக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேதி அறிவித்தது.
இதையடுத்து இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்குத்தான் வழங்க வேண்டும் என இரு அணிகளும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தன. இதையடுத்து தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.

சசிகலா அணி
சசிகலா அணி தரப்பில் இரட்டை இலை சின்னத்தை பெற தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரியவந்தது. தேர்தல் ஆணையத்திடம் முறைகேடான முறையில் சின்னத்தை மீட்க பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் அணியினர் முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ரூ 50 கோடி லஞ்சம்
இரட்டை இலை சின்னத்தை பெற சுகேஷ் ரூ 50 கோடி லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதில் முன்பணமாக ரூ 2 கோடியை தினகரன் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த புகார் மீது அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தியது. இதில் "சுகேஷ் சந்திரசேகர் யாரென்றே எனக்கு தெரியாது. நான் அவரை பார்த்தது கூட இல்லை என தெரிவித்திருந்தார்.

பண மோசடி வழக்கு
இந்த நிலையில் பல்வேறு பணமோசடி வழக்குகளில் சிறையில் இருக்கும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் பண மோசடி தொடர்பான வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். அவரை வரும் 15 ஆம் தேதி வரை காவலில் எடுத்துள்ள அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

ரூ 2 கோடி இல்லை ரூ 10 கோடி
இந்த நிலையில் முன்பு தனக்கு டிடிவி தினகரன் ரூ 2 கோடி லஞ்சம் முன் பணம் கொடுத்ததாக கூறியிருந்த சுகேஷ் சந்திரசேகர் தற்போது திடீரென 10 கோடி ரூபாய் கொடுத்ததாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முக்கிய சாட்சியான கோபிநாத் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இரட்டை இலை வழக்கில் விசாரணை நடத்த வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி டிடிவி தினகரன் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிகமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன












Click it and Unblock the Notifications