"பேச்சுவார்த்தை" முடியலயோ.. வெளியே வந்ததும்.. சசிகலா கையில் வந்து விழுந்த "நோட்டீஸ்".. செம டென்ஷன்!
சசிகலாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் வந்திருக்கிறது
சென்னை: இன்னும் "பேச்சுவார்த்தை" முடியலையோ என்ற கேள்விதான் எழுகிறது சசிகலாவுக்கு அமலாக்கத்துறை விடுத்துள்ள நோட்டீஸைப் பார்க்கும்போது.
ஒரு விசாரணை அமைப்பு குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்புவதை யாரும் கேள்வி கேட்கவும் முடியாது, உள்நோக்கம் கற்பிக்கவும முடியாதுதான். ஆனால் சசிகலா விடுதலையான அதே நாளில் அவரது கையில் நோட்டீஸும் வந்து விழுந்துள்ளதுதான் பல விவாதங்களை எழுப்பியுள்ளது.
அமலாக்கத்துறை விடுத்துள்ள நோட்டீஸையும், கர்நாடக சிறைத்துறை அதிகாரிகளே, சசிகலாவிடம் ஒப்படைத்துள்ளனர் என்பதுதான் விசேஷமானது. அதாவது சசிகலா அடைக்கப்பட்டிருந்த பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்த நோட்டீஸ்தான் அது.

சசிகலா
சொத்துக் குவிப்பு வழக்கில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்று கடந்த 4 வருடமாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார் சசிகலா. நேற்றுதான் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கொரோனா சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் சசிகலா உடனடியாக வீடு திரும்பவில்லை.

அதிகாரிகள்
அவர் மருத்துவமனையில் இருந்ததால் விடுதலை சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் மருத்துவமனைக்கே கொண்டு வந்து அவரிடம் கையெழுத்துப் பெற்றுச் சென்றனர் சிறை அதிகாரிகள். கூடவே ஒரு நோட்டீஸையும் கொடுத்து விட்டுப் போயுள்ளனர்.

ரெய்டு
பிரித்துப் படித்தால்.. அது அமலாக்கத்துறை அனுப்பியிருந்த நோட்டீஸாகும். இது எதற்கு இந்த நோட்டீஸ் என்றால் சசிகலா சிறையில் இருந்தபோது கடந்த ஆண்டு சசிகலாவின் வீடு, அவரது உறவினர்களின் வீடு, அலுலகம் உள்ளிட்டவற்றில் ஐடி ரெய்டு நடந்தது. அப்போது பல ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்கள் தொடர்பாக விளக்கம் கேட்டுத்தான் சிறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது அமலாக்கப் பிரிவு.

அதிகாரிகள்
அந்த நோட்டீஸைத்தான் தற்போது சசிகலாவிடம் கொடுத்துள்ளனர் அதிகாரிகள். சிறையிலிருந்து விடுதலையானாலும் கூட அவரை விட்டு இந்த விசாரணைகள் ஓயாது போல என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. சசிகலாவால் தேர்தலில் போட்டியிட முடியாது என்றாலும் கூட அவரால் கட்சியை நடத்த முடியும், பல விஷயங்களை சாதிக்க முடியும் என்பதால் அவர் முழுவதுமாக இன்னும் முடிந்து போன சக்தி அல்ல.. அவராலும் சலசலப்புகளை ஏற்படுத்த முடியும்.

பரபரப்பு
இதனால்தான் சிலர் தொடர்ந்து சசிகலாவை தங்களது கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்வதாக தெரிகிறது. இதன் ஒரு அடையாளமாகவே இந்த விசாரணை, விளக்கம் என்றெல்லாம் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. எது எப்படியோ சசிகலாவின் ஆட்டம் எப்படி இருக்கப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும். இடை இடையே இதுபோன்ற விசாரணைகளும் குறுக்கிடவே செய்யும் என்றும் எதிர்பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications