‛‛புதிய வைரஸ்’’.. கொரோனாவைபோல் மனிதர்களை தாக்க வரும் பேராபத்து.. தொற்றுநோய் நிபுணர் எச்சரிக்கை
சென்னை: கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கானவர்களை கொன்று ஒட்டுமொத்த உலகத்தையுமே முடக்கிவிட்டது. இந்நிலையில் தான் கொரோனா வைரஸ் போன்ற பெரும்தொற்று எப்போது வேண்டுமானாலும் உலக நாடுகளை தாக்கலாம். இது விலங்கிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என இங்கிலாந்து தொற்றுநோய் நிபுணர்கள் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு அடுத்தடுத்த நாடுகளுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டது. 2020ல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்தியா உள்பட பல நாடுகளில் பல லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் கொத்து கொத்தாக மக்கள் மரணமடைந்தனர். 2020 மார்ச் மாதம் 11ம் தேதி கொரோனா வைரஸ் என்பது உலகளாவிலய இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.
இதையடுத்து 2022ம் ஆண்டுக்கு பிறகு கொரோனா கட்டுக்குள் வந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தான் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொற்றுநோய் நிபுணர்கள் புதிய குண்டை தூக்கி போட்டுள்ளனர். அதாவது உலகம் கொரோனா போன்ற இன்னொரு பெருந்தொற்றால் மனிதர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸால் இந்த பேரிடம் ஏற்படலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுபற்றி லண்டனர் கிங்ஸ் கல்லூரியின் தொற்றுநோய் மருத்துவரான டாக்டர் நதாலின் மெக்டெர்மாட் கூறுகையில், ‛‛அடுத்து ஒரு தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. இது அடுத்த 2 ஆண்டுகளில் நடக்கலாம் அல்லது 20 ஆண்டுகளுக்குள் நடக்கலாம். மேலும் அதன் தாக்கம் என்பது நீண்டகாலம் இருக்கலாம். இதனால் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மீண்டும் நாம் சில தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
புவி வெப்பமடைதல் மற்றும் காடுகள் அழிப்பு உள்ளிட்டவற்றால் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்கள் பரவி நோயை ஏற்படுத்தும் சாத்தியம் என்பஅதிகமாக உள்ளது. குறிப்பாக அமேசான் மற்றும் ஆப்பிரிக்காவில் மரங்களை வெட்டுவதன் மூலம் விலங்கு, பூச்சிகள் மனிதர்களை நெருங்கி வாழ தொடங்குகின்றன. இதனால் நோய் பாதிப்பு என்பது ஏற்படலாம்’’ என தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications