கட்டுக்கட்டாய் கரன்சி ... புதையல் போல சிக்கிய தங்க வைர நகைகள் - பொறியில் சிக்கிய பாண்டியன்
சுற்றுச்சூழல் துறை அதிகாரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாய் கரன்சிகளும், தோண்ட தோண்ட கிடைக்கும் புதையல் போல தங்கம் வைரம், நகைகளும் சிக்கியுள்ளது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே அதிர்ச்சியடையும் வகையில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணமும், வைர நகைகளும், தங்கம், வெள்ளி பாத்திரங்களும் சிக்கியுள்ளன. லஞ்சமாக வாங்கி சேர்த்து வைத்த அந்த அதிகாரி இப்போது பொறியில் சிக்கிய எலியாக மாட்டிக்கொண்டார்.
அரசு அதிகாரிகள் தங்களின் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமமானது என்று சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து சாட்டையடி கொடுத்தனர். லஞ்ச ஊழல் பற்றி எத்தனையோ திரைப்படங்களில் காட்சி அமைப்புகள் சித்தரிக்கப்பட்டாலும் அரசு அலுவலங்களில் கடைநிலை ஊழியர் முதல் உயரதிகாரி வரை லஞ்சத்தில் ஊறிப்போய் உள்ளனர் என்பது மீண்டும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் சுற்றுச்சூழல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் பாண்டியன். சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதி அளிக்க பல்வேறு நிறுவனங்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று வருவதாக மாநில லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியனின் அலுவலகத்தில் திங்கட்கிழமை மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். கூடுதல் எஸ்.பி. லாவண்யா தலைமையில் நேற்று மாலையில் தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. அலுவலகம் மட்டுமல்லாது சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாண்டியனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

பீரோவில் பணம்
பாண்டியனின் வீட்டில் கிடைத்த பொருட்களை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.
வீட்டில் உள்ள பீரோவில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களையும் 500 ரூபாய் நோட்டுக்களையும் அடுக்கி வைத்து இருந்தார் பாண்டியன்.

தங்க வைர ஆபரணங்கள்
தங்கம், வைரம், தங்க செயின், பிரேஸ் லெட், வளையல்கள், ஆரம், மோதிரங்கள் என 20 வகையான தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டன.நீளமான வைர மாலை ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். சொத்து ஆவணங்களும் சிக்கி உள்ளது.

வெள்ளிக்குத்துவிளக்கு பாத்திரங்கள்
வெள்ளியில் விதவிதமான நகைகளும் பீரோவில் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. வெள்ளி தட்டுகள், வெள்ளி குத்து விளக்குகள், வெள்ளி டம்ளர்கள், வெள்ளி பாத்திரங்கள் ஆகியவையும் அதிக அளவில் கைப்பற்றப்பட்டுள்ளன. பாண்டியனை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் பல தகவல்கள் வெளியே வந்துள்ளன.

தரகராக செயல்பட்ட பாண்டியன்
லஞ்சப்பணத்தில் உல்லாச பயணமும் சென்று வந்துள்ளார் பாண்டியன். அதிகாரிகளையும் பெண்களையும் சுற்றுலாவிற்கு அழைத்து சென்று வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பலநாள் தப்பி வந்த பாண்டியன் இப்போது பொறியில் சிக்கிய எலியாக தவிக்கிறார். லஞ்ச வாங்கிய விவகாரத்தில் தரகர் போன்று செயல்பட்டுள்ளதால்,தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் பல அதிகாரிகளின் தலைகளும் உருளும் வாய்ப்பு உள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications