எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்தார் எடப்பாடி பழனிசாமி! கரைகிறதா அதிமுக! செங்ஸ் மாஸ்டர் பிளான்?
சென்னை: முதல்வரை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இழந்தார். இதனால் அதிமுக தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவின் ஒட்டுமொத்தப் பலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளன. தவெக தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலை வகிப்பதாலும், திமுக இரண்டாவது இடத்தைப் பிடிப்பதாலும், அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, கடந்த 2021 முதல் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அந்தப் பதவியை 2026 தேர்தலில் இழக்கிறார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அதிமுக சந்தித்த முக்கிய தேர்தல் பின்னடைவுகள் பின்வருமாறு:
2019 மக்களவைத் தேர்தல்: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்தத் தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக ஒரே ஒரு தொகுதியில் (தேனி) மட்டுமே வெற்றி பெற்றது. இது அவர் தலைமை ஏற்ற பிறகு சந்தித்த முதல் பெரிய சரிவு.
2021 சட்டமன்றத் தேர்தல்: முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலைச் சந்தித்த அதிமுக ஆட்சியைப் பறி கொடுத்தது. 66 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது.
2022 உள்ளாட்சித் தேர்தல்: தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக அமோக வெற்றி பெற்றது. கொங்கு மண்டலம் உள்ளிட்ட அதிமுகவின் கோட்டைகளிலும் அக்கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்தது.
2024 மக்களவைத் தேர்தல்: பாஜக கூட்டணியில் இருந்து விலகித் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, ஒரு தொகுதியைக் கூடக் கைப்பற்ற முடியாமல் "பூஜ்ஜியம்" என்ற நிலையில் படுதோல்வியைச் சந்தித்தது.
2026 சட்டமன்றத் தேர்தல் (தற்போதைய முடிவுகள்): 17-வது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 50 முதல் 53 இடங்களுக்குள் சுருங்கி, மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் அதிகாரப்பூர்வமாக இழக்கிறார்.
உள் கட்சி பூசல் மற்றும் விமர்சனங்கள்: அதிமுகவில் ஒற்றைத் தலைமை உருவான பிறகு, மூத்த நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமியின் முடிவுகளால் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள் அதிமுகவின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது எடப்பாடி தொகுதியில் 69,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தாலும், மாநில அளவில் கட்சி சந்தித்த இந்தத் தோல்வி அவருக்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தேர்தலிலும் வெற்றி பெறாத நிலையில் தவெகவில் வென்ற செங்கோட்டையன், அதிமுக மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்க வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படும். அதிமுகவில் ஓட்டை விழ வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications