திமுகவுக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு! ஸ்டாலினிடம் கடிதம் அளித்த எர்ணாவூர் நாராயணன்!
சென்னை: எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கழகத்தின் ஆதரவு திமுகவுக்கு தான் என அக்கட்சியின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கழகத்தின் ஆதரவு கடிதத்தை திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார் நாராயணன். இவர் தற்போது பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவராக உள்ளார். திமுகவை பொறுத்தவரை கடந்த சட்டசபைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருப்பதாகவும் அதேபோல் வகுத்த திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது எனவும் எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் சமத்துவ மக்கள் கழகத்திற்கு வாரியப் பதவி தருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னார், அதே போல் சொன்னதை செய்தார் எனத் தெரிவித்தார். அது போல பனைத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பதவியைத் தனக்கு தந்தார் எனவும் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் மக்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறிய எர்ணாவூர் நாராயணன். தமிழக அரசு தான் மக்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கியதாக தெரிவித்தார்.
சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணனை பொறுத்தவரை கடந்த 2011-2016 காலக்கட்டத்தில் நாங்குநேரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் பொதுச்செயலாளராக இருந்த இவருக்கு கூட்டணி அடிப்படையில் சீட் கொடுத்து எம்.எல்.ஏ. ஆக்கினார் ஜெயலலிதா. அதன் பிறகு சரத்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமத்துவ மக்கள் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வரும் இவர் திமுகவுடன் ஐக்கியமானார். கடந்த சட்டசபைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் 1 சீட் கேட்ட இவருக்கு, வெற்றி பெற்றால் வாரியத் தலைவராக்குகிறோம் என உறுதி கொடுத்தார் ஸ்டாலின். அதன்படி அந்த உறுதியை நிறைவேற்றிவிட்டார்.
இப்போது தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவராக இருக்கும் இவர் ஸ்டாலினின் குட்புக்கில் இடம் பிடித்திருக்கிறார். தூத்துக்குடி, நெல்லை, வட சென்னை மாவட்டங்களில் ஓரளவு நாடார் சமுதாய வாக்குவங்கியை வைத்துள்ளார். இதன் காரணமாக இவரையும் அனுசரித்துச் செல்கிறது திமுக தலைமை.
-
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்!












Click it and Unblock the Notifications