Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவுக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு! ஸ்டாலினிடம் கடிதம் அளித்த எர்ணாவூர் நாராயணன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கழகத்தின் ஆதரவு திமுகவுக்கு தான் என அக்கட்சியின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கழகத்தின் ஆதரவு கடிதத்தை திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார் நாராயணன். இவர் தற்போது பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவராக உள்ளார். திமுகவை பொறுத்தவரை கடந்த சட்டசபைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருப்பதாகவும் அதேபோல் வகுத்த திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது எனவும் எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளார்.

Ernavoor Narayanan has announced that the DMK will be supported by the samathuva makkal Kazhagam

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் சமத்துவ மக்கள் கழகத்திற்கு வாரியப் பதவி தருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னார், அதே போல் சொன்னதை செய்தார் எனத் தெரிவித்தார். அது போல பனைத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பதவியைத் தனக்கு தந்தார் எனவும் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் மக்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறிய எர்ணாவூர் நாராயணன். தமிழக அரசு தான் மக்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கியதாக தெரிவித்தார்.

சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணனை பொறுத்தவரை கடந்த 2011-2016 காலக்கட்டத்தில் நாங்குநேரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் பொதுச்செயலாளராக இருந்த இவருக்கு கூட்டணி அடிப்படையில் சீட் கொடுத்து எம்.எல்.ஏ. ஆக்கினார் ஜெயலலிதா. அதன் பிறகு சரத்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமத்துவ மக்கள் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வரும் இவர் திமுகவுடன் ஐக்கியமானார். கடந்த சட்டசபைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் 1 சீட் கேட்ட இவருக்கு, வெற்றி பெற்றால் வாரியத் தலைவராக்குகிறோம் என உறுதி கொடுத்தார் ஸ்டாலின். அதன்படி அந்த உறுதியை நிறைவேற்றிவிட்டார்.

இப்போது தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவராக இருக்கும் இவர் ஸ்டாலினின் குட்புக்கில் இடம் பிடித்திருக்கிறார். தூத்துக்குடி, நெல்லை, வட சென்னை மாவட்டங்களில் ஓரளவு நாடார் சமுதாய வாக்குவங்கியை வைத்துள்ளார். இதன் காரணமாக இவரையும் அனுசரித்துச் செல்கிறது திமுக தலைமை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+