மழை கைவிட்டுவிட்டது! மானாவாரி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பாவம்! நிவாரணம் தரச் சொல்லும் ஈஸ்வரன்!
சென்னை: பருவ மழை பொய்த்த காரணத்தால் மானாவாரி பயிர் செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''இந்த வருடம் கடந்த சில மாதமாக பருவ மழை சரியாக பொழியவில்லை. கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டத்தில் பருவமழையை எதிர்பார்த்து விதைக்கப்பட்ட நிலக்கடலை, சோளம், கம்பு போன்ற மானாவாரி பயிர்கள் மழை இல்லாத காரணத்தினால் மிகுந்த விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விதைப்பு செய்யப்பட்ட விதைகளும், முளைத்து வெளியே வந்த பயிர்களும் வாடி கருகி விட்டது. வாடிய பயிர்கள் கால்நடை தீவனத்திற்கு கூட ஆகாத நிலையில் உள்ளது. சென்ற வருடம் பெய்த மழையின் காரணமாக உயர்ந்த நிலத்தடி நீர்மட்டத்தை பயன்படுத்தி ஒருசில இடத்தில், கிணற்று பாசனம் மூலம் ஓரளவு சமாளித்து வருகிறார்கள்.
எனவே பாதிப்பின் விளிம்பில் உள்ள விவசாயிகளை அந்த அந்த மாவட்டங்களில் உரிய முறையில் கணக்கெடுத்து மானாவாரி பயிர் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications