அதிமுக திமுக சேர்ந்தாலும் நம்பர் பிரச்சனை.. ஆட்சியமைக்க சாத்தியமே இல்லை.. கணக்கை பாருங்கள்
சென்னை: திமுக அதிமுக இணைந்து உண்மையில் ஆட்சியமைக்க முடியமா.. அதற்கு சாத்தியம் மிக குறைவு தான்.. ஏனெனில் அவர்களிடம் மெஜாரிடிக்கான நம்பர் இல்லை. அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்தே ஆட்சியமைக்க வேண்டும். அதிமுக திமுக சேருவதாக வைத்தாலும் 47+57 சேர்த்தால் 105 இடங்கள் தான் வரும்.. பின்னாளில் கூட்டணி கட்சிகளும் முழுமையாக இணைய வேண்டும். அந்த கணக்கு குறித்து சற்று விரிவாக பார்ப்போம்..
தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட கட்சிகள் இல்லாத ஒரு அரசு அமையும் வாய்ப்பு உருவாகி உள்ளது. ஆனால் அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு இன்னும் விஜய்க்கு கிடைக்கவில்லை.. நம்பிக்கைவாக்கெடுப்பு நடத்த அனுமதி அளித்தால், எப்படியும் மாற்றுக்கட்சி ஆட்கள் வாக்களிக்க அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அதிமுக மற்றும் பிற கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு தர வாய்ப்பு உள்ளது. ஆனால் 117 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை கொண்டு வந்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைக்க முடியும் என்று ஆளுநர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

தற்போதைய நிலையில் 5 முதல் ஆறு எம்எல்ஏக்கள் ஆதரவு விஜய்க்கு தேவை.. இதில் விசிக, இடதுசாரிகள் ஆதரவு தந்தால் ஆட்சியமைக்க முடியும். அல்லது , அமமுக, பாமக , தேமுதிக போன்றவை ஆதரவு தந்தாலும் ஆட்சியமைக்க முடியும். ஏனெனில் தற்போதைய நிலையில் தவெகவிற்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளன. கூடுதலாக காங்கிரஸ் 5 எம்எல்ஏக்கள் ஆதரவை தந்துள்ளது. இன்னும் ஐந்து பேர் ஆதரவு தேவை.
ஏனெனில் ஏதாவது ஒரு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி பார்த்தால், காலியானால் தொகுதியில் சில மாதங்களுக்கு (தேர்தல் நடைபெறும் வரை) இன்னும் குறையும்.. எப்படி என்றாலு ஐந்து எம்எல்ஏக்கள் முதல் ஆறு எம்எல்ஏக்கள் ஆதரவு கண்டிப்பாக விஜய்க்கு தேவைப்படும். எனவே கூடுதல் எம்எல்ஏக்கள் ஆதரவை பெற தொடர்ந்து முயன்று வருகிறார்.
இந்த சூழலில் திமுக + அதிமுக கூட்டணி வைத்து ஆட்சியமைக்க தகவல் பரவி வருகிறது. அதனை உண்மை என்று நம்பும் அளவிற்கு ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் திமுக அதிமுக சேர்ந்தால் ஆட்சியமைக்க முடியுமா என்றால், நிச்சயம் ஆட்சியமைக்க முடியாது. ஏனெனில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்றுள்ளது. இதில் திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும், காங்கிரஸ் ஐந்து இடங்களிலும், பாமக நான்கு இடங்கிளிலும், ஐயுஎம்எல் 2 இடங்களிலும், சிபிஐ, சிபிஎம் தலா இரண்டு இடங்களிலும், விசிக இரண்டு இடங்களிலும், பாஜக, அமமுக, தேமுதிக தலா ஒரு இடத்திலும் வென்றுள்ளன.
இதில் ஒருபேச்சுக்கு அதிமுக திமுக சேருவதாக வைத்தாலும் 47+57சேர்த்தால் 105 இடங்கள் தான் வரும்.. ஆட்சியமைக்க முடியாது. ஏனெனில் திமுக கூட்டணியில் உள்ள விசிகவிற்கு இரண்டு இடங்கள் உள்ளன. சிபிஎம் 2 இடங்கள், சிபிஐ 2 இடங்கள் வைத்துள்ளது. ஐயுஎம்எல் 2, தேமுதிக 1இடங்கள் வைத்துள்ளது. 114 இடங்கள் தான் வரும். மீதமுள்ள இடங்களில் அதிமுக கூட்டணியில் உள்ள அமமுக ஆதரித்தாலும் 115 தான் வரும். அதன்பிறகு ஆட்சியமைக்க வேண்டும் என்றால் பாமக ஆதரவு வேண்டும். பாமகவின் 4 சீட் ஆதரவு கிடைக்கும் என்றால் 119 வரும்.. ஆனால் அப்படி நடந்தால் விசிக, இடதுசாரிகள் கூட்டயை ஒப்புக்கொள்ளாது. பாமக+ விசிக+இடதுசாரிகள் இணைந்து ஆட்சியமைக்க சாத்தியமே இல்லை.. அப்படி இரண்டு பக்கமும் நின்றால், பாஜகவிடம் உள்ள ஒரு இடம் யாருக்கும் சாதகமாகாது..
எனவே கிட்டத்தட்ட திமுக, அதிமுக இணைந்தாலும் ஆட்சியமைக்க முடியாது என்பதே எதார்த்தம். அதேநேரம் இப்போது விஜய்க்கே வாய்ப்பு உள்ளது. ஒருவேளை விசிக கைவரித்தால், விஜய் நேரடியாக அதிமுகவிடமே பேச வேண்டிய நிலை வரும். அப்படி அதிமுக கூட்டணிக்கு வந்தால், காங்கிரஸ் தானாகவே வெளியேறிவிடும். அதன்பிறகு விஜய் ஆட்சி அமைவது உறுதியாகிவிடும். இப்போது பந்து விசிக, இடதுசாரிகள் பக்கம் வந்துள்ளது. அவர்கள் முடிவெடுக்காமல் போனால், அது அதிமுகவின் பக்கம் போகவே அதிக வாய்ப்பு உள்ளது. விசிகவிற்கு வாய்ப்பு கிடைக்க போகிறதா அல்லது அதிமுகவிற்கு சாதகமாக போகிறதா என்பது இன்று அல்லது நாளைக்குள் தெரிந்துவிடும்.














Click it and Unblock the Notifications