இனி காவல்துறையில் எல்லாமே தமிழில் தான் இருக்கணும்.. தமிழக டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு
சென்னை: தமிழகத்தில் காவல்துறை தொடர்பான அறிவிப்புகள், பதிவேடுகள் மற்றும் குறிப்பாணைகள் என அனைத்துமே தமிழில் தான் கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழக டிஜிபி ஜேகே திரிபாதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் மொழி வளர்ச்சித்துறை சார்பாக, தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்த 'ஆட்சிமொழி திட்டச் செயல்பாடு' என்ற ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் தமிழ் மொழி வளர்ச்சித்துறை சில ஆலோசனைகளை வழங்கியது.
இது தொடர்பாக கடந்த 6ஆம் தேதி தமிழ்நாடு காவல் துறைக்கும் தமிழ் மொழி வளர்ச்சித்துறையின் அறிக்கை அனுப்பப்பட்டது. அதன்பிறகு 7ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை தமிழ்நாடு காவல் துறை அதிகாரிகள் தமிழ் மொழியை முழு பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசித்தனர்.

தமிழில் இருக்கணும்
இதையடுத்து, தமிழகத்தில் காவல்துறை தொடர்பான அறிவிப்புகள், பதிவேடுகள் மற்றும் குறிப்பாணைகள் என அனைத்துமே தமிழில் தான் கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழக டிஜிபி ஜேகே திரிபாதி இன்று(திங்கள்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடிதங்கள்
அவர் தனது அறிக்கையில், காவலர்கள் வருகை பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இடுவதுடன், அனைத்து விதமான வரைவு கடிதத் தொடர்புகள் மற்றும் குறிப்பாணைகள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்..

தமிழில் பராமரிக்க
மேலும் இருக்கைகளில் உள்ள தன் பதிவேடு, முன்கொணர்வு பதிவேடு உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளும் தமிழில் பராமரிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பெயர்கள் மாற்றம்
அனைத்து காவல் வாகனங்களிலும் "காவல்" என தமிழில் எழுதுவதுடன் அலுவலக முத்திரைகள் மற்றும் பெயர்ப்பலகைகள் தமிழில் மாற்றப்படவேண்டும் என்றும் தனது அறிக்கையில் திரிபாதி குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழி பதிவுகள் தொடர்பாக அனைத்து காவல்துறை அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்குமாறும் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications