இனி காவல்துறையில் எல்லாமே தமிழில் தான் இருக்கணும்.. தமிழக டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு
சென்னை: தமிழகத்தில் காவல்துறை தொடர்பான அறிவிப்புகள், பதிவேடுகள் மற்றும் குறிப்பாணைகள் என அனைத்துமே தமிழில் தான் கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழக டிஜிபி ஜேகே திரிபாதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் மொழி வளர்ச்சித்துறை சார்பாக, தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்த 'ஆட்சிமொழி திட்டச் செயல்பாடு' என்ற ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் தமிழ் மொழி வளர்ச்சித்துறை சில ஆலோசனைகளை வழங்கியது.
இது தொடர்பாக கடந்த 6ஆம் தேதி தமிழ்நாடு காவல் துறைக்கும் தமிழ் மொழி வளர்ச்சித்துறையின் அறிக்கை அனுப்பப்பட்டது. அதன்பிறகு 7ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை தமிழ்நாடு காவல் துறை அதிகாரிகள் தமிழ் மொழியை முழு பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசித்தனர்.

தமிழில் இருக்கணும்
இதையடுத்து, தமிழகத்தில் காவல்துறை தொடர்பான அறிவிப்புகள், பதிவேடுகள் மற்றும் குறிப்பாணைகள் என அனைத்துமே தமிழில் தான் கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழக டிஜிபி ஜேகே திரிபாதி இன்று(திங்கள்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடிதங்கள்
அவர் தனது அறிக்கையில், காவலர்கள் வருகை பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இடுவதுடன், அனைத்து விதமான வரைவு கடிதத் தொடர்புகள் மற்றும் குறிப்பாணைகள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்..

தமிழில் பராமரிக்க
மேலும் இருக்கைகளில் உள்ள தன் பதிவேடு, முன்கொணர்வு பதிவேடு உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளும் தமிழில் பராமரிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பெயர்கள் மாற்றம்
அனைத்து காவல் வாகனங்களிலும் "காவல்" என தமிழில் எழுதுவதுடன் அலுவலக முத்திரைகள் மற்றும் பெயர்ப்பலகைகள் தமிழில் மாற்றப்படவேண்டும் என்றும் தனது அறிக்கையில் திரிபாதி குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழி பதிவுகள் தொடர்பாக அனைத்து காவல்துறை அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்குமாறும் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா












Click it and Unblock the Notifications