தந்தை பெரியாரின் கொள்கைகளில் உறுதியாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்: ராகுல் காந்தி இரங்கல்
டெல்லி: தந்தை பெரியாரின் கொள்கைகளில் உறுதியாக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமது இரங்கல் செய்தியில், ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு செய்தி வருத்தம் அளிக்கிறது. அச்சமற்ற கொள்கைத் தலைவராக திகழ்ந்வர்; தந்தை பெரியாரின் கொள்கைகளில் உறுதியாக நின்று மக்களிடத்தில் கொண்டு சேர்த்தவர்; தமிழ்நாட்டுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆற்றிய பணி என்றும் உத்வேகம் தரக் கூடியது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications