தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோளாறு.. வாக்குப் பதிவு பாதிப்பு!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கும் 18 சட்டசபைக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்கை செலுத்தி வருகின்றனர்.

மதுரையை தவிர்த்து வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. எனினும் பெரும்பாலான தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரந்திரங்கள் கோளாறு ஏற்பட்டது.
இதனால் வாக்குப் பதிவில் பாதிப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம், குமரியில் மூன்று இடங்களிலும் கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி, சுசீந்திரம், லாயம் ஆகிய இடங்கிளில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அது போல் நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், பொள்ளாச்சி கோட்டூர் சாலை, நெல்லை கோடீஸ்வரன் சாலை, சென்னை அண்ணா நகர் மேற்கு ஆகிய இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் வாக்காளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications