நாளைக்கேவா?.. அமைதியாக "மூவ்" ஆகும் மகேந்திரன்.. முக்கிய கட்சிக்கு மாற திட்டமா.. பின்னணி என்ன?
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வெளியேறிய மருத்துவர் மகேந்திரன் நாளை முக்கிய கட்சி ஒன்றில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அதன் முக்கிய நிர்வாகிகள் பலர் கடந்த சில தினங்களுக்கு முன் வரிசையாக வெளியேறினார்கள். அதன்படி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன், பொன்ராஜ், மற்ற சி.கே.குமரவேல், மௌரியா,பொறுப்பாளர்கள், சந்தோஷ்பாபு, முருகானந்தம் ஆகியோர் வெளியேறினார்கள்.
அதன்பின் தொடர்ச்சியாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரிசையாக வெளியேறினார்கள். இந்த நிலையில் மநீமவில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் முடிவில் அதன் தலைவர் கமல்ஹாசன் இருக்கிறார்.

வெளியேற்றம்
இது தொடர்பாக பேசிய மருத்துவர் மகேந்திரன், கட்சியில் ஜனநாயகம் இல்லை. அதனால் வெளியேறுகிறோம். கடந்த ஒன்றரை வருடமாகவே கட்சியில் ஜனநாயகம் இல்லை.தேர்தல் முடிவிற்கு பின் கமல்ஹாசன் மாறுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் மாறவில்லை. கட்சியில் எங்கள் குரலுக்கு மதிப்பு இல்லை என்று கூறி மகேந்திரன் கட்சியில் இருந்து வெளியேறினார்.

என்ன
இந்த் நிலையில் மகேந்திரனுக்கு கொங்கு மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு இருப்பதால் இவரை உள்ளே இழுத்து போட சில கட்சிகள் முயன்று வந்தன. பண ரீதியாகவும், தேர்தல் பணிகளில் மக்களிடம் கவனம் பெற்றதாலும் மகேந்திரன் அதிக முக்கியத்துவம் பெற்றார். அதோடு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இவர் இரண்டாவது பெரிய தலைவராகவும் இருந்தது கவனிக்கப்பட்டது.

கொங்கு
இதனால் கொங்கு மாவட்டத்தில் இவரை களமிறக்க பெரிய அளவில் கட்சிகள் முயன்று வருகின்றன. மகேந்திரனை உள்ளே கொண்டு வந்தால் கட்சிக்கு நல்ல முகமாக இருப்பார் என்று திமுக நினைப்பதாக ஒரு பக்கம் ஏற்கனவே தகவல் வந்தது. கொங்கில் வளரும் முடிவில் திமுக இவரை உள்ளே இழுக்கும் என்றும் , திமுக இவரை அணுகி வருகிறது என்றும் கூறப்பட்டது. அதே சமயம் இவர் பாஜகவிற்கு நெருக்கமானவர் என்றும் செய்திகள் வந்தன.

பாஜக
சில பாஜக தலைவர்களுடன் பேசி வருகிறார் என்றும் மகேந்திரன் குறித்து தகவல்கள் வந்தன. இவரின் அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து நிறைய தகவல்கள் வெளியான நிலையில், மகேந்திரனின் உறவினர்கள் சிலர் அதிமுகவில் கொங்கு மாவட்டங்களில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. இவர் அதிமுகவில் ஐக்கியம் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டது.

எப்படி
இந்த நிலையில்தான் மகேந்திரன் நாளை முக்கிய கட்சி ஒன்றில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. நாளை அரசியல் முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை இவர் வெளியிட உள்ளார் என்கிறார்கள். தமிழ்நாட்டின் முக்கியமான கட்சி ஒன்றில் இவர் இணைவதற்கான டீல் முடிந்துவிட்டது.. நாளை இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று பேசிக்கொள்கிறார்கள்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications