"பணத்திமிர்.. ஆணவம்.." பொன்முடி வீட்டில் ரெய்டு! உண்மை காரணம் என்ன.. ஜெயக்குமார் பரபர! என்ன சொன்னார்
சென்னை: திமுக மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி வீட்டில் இன்று அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதல் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருகிறது.
அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். மத்திய படைகளின் பாதுகாப்புடன் இந்த ரெய்ட் நடந்து வருகிறது.

இன்று காலை காலை 7 மணியளவில் தொடங்கிய இந்த ரெய்டு, பல இடங்களில் தொடர்ந்து வருகிறது. இந்த சோதனைக்கு என்ன காரணம் என்று என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேநேரம், பொன்முடி வீட்டில் நடத்தப்படும் இந்த ரெய்டிற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் மத்திய பாஜகவின் முயற்சி இது என்றே காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் சாடியுள்ளன.
ஜெயக்குமார்: இதற்கிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த ரெய்டு குறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "அமலாக்கத் துறையாக இருந்தாலும் சரி, வருமான வரித்துறையாக இருந்தாலும் சரி முகாந்திரம் அல்லது ஆதாரம் கிடைத்தால் மட்டுமே சோதனை செய்வார்கள்.
மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் கொள்ளத் தேவையில்லை. தவறு செய்யவில்லை என்றால் இதற்கெல்லாம் அஞ்சத் தேவையே இல்லை. தவறு செய்யவில்லை என்றால் திமுக ஏன் பதற்றப்பட வேண்டும். உடனடியாக பிடித்துச் சென்று தூக்கிலிட இப்போது நடப்பது ஒன்றும் மன்னராட்சி இல்லை.. நீதிமன்றம் என்று ஒன்று இருக்கிறது. உரிய விசாரணைக்குப் பின்னரே நடவடிக்கை எடுப்பார்கள். எனவே, இதைத் துணிச்சலாக எதிர்கொள்வதே சரியான நிலைப்பாடு.

கூச்சலிட வேண்டாம்: அதைவிட்டுவிட்டு சும்மா பழிவாங்குகிறார்கள். அப்படி இப்படி எனக் கூச்சலிடக்கூடாது. தனக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போலப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திமுக எத்தனையோ பொய் வழக்குகளை எங்கள் மீது போட்டுள்ளது. அப்போதெல்லாம் நாங்கள் எங்கள் தோழமை கட்சிகளை விட்டு இப்படியெல்லாம் பேசச் சொன்னோமா... இதெல்லாம் எதற்காகச் செய்கிறார்கள்.
இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதாவது 2 லட்சம் டன் அளவுக்கு இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இவர்களைச் சட்டம் சும்மா விட்டுவிடும் என நினைக்கிறார்களா..
கடும் தாக்கு: திமிரின் உச்சம், ஆணவம், பண்ணையார் மனநிலை, பணக் கொழுப்பு, மக்களை அவமதிக்கும் அமைச்சர் பணக் கொழுப்பில் தானே இப்படிச் செய்கிறார். இதை அமலாக்கத் துறை வேடிக்கை பார்க்க மாட்டார்கள். தப்பு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தில் சென்று எதிர்கொள்ளுங்கள்.. இப்படி எதிர்க்கட்சிகளை வைத்து கூச்சல் போட வேண்டாம்" என்றார்.
கடந்த மாதம் தான் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இப்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் மற்றொரு மூத்த அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications