சட்டசபையில் கருணாநிதி படத்திறப்பு விழா.. அதிமுக புறக்கணித்தது ஏன்? ஜெயக்குமார் தரும் புது விளக்கம்
சென்னை: தமிழ்நாடு சட்டசபை வரலாற்றை திமுக மாற்றி அமைப்பதால் கருணாநிதி படத்திறப்பு விழாவில் அதிமுக கலந்துகொள்ளாது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்,
தமிழ்நாடு சட்டசபையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அதில் கலந்துகொள்ளும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்தைத் திறந்து வைத்தார்.

இந்த விழா மாலை 5 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இருப்பினும். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
இந்த விழாவை அதிமுக புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்கிறது. ஏனென்றால் சட்டசபையின் வரலாற்றையே மாற்றியமைக்க திமுக முயல்கிறது.
சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தைத் திறக்கும் நிகழ்ச்சியை திமுகவினர் புறக்கணித்தனர். அப்படி இருக்கும்போது நாங்கள் மட்டும் கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு எப்படி வரமுடியும்" எனச் சற்றே காட்டமாக கூறினார்.












Click it and Unblock the Notifications