Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் உள்ள 47 கோயில்களின் நிர்வாக அதிகாரிகள்.. சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு பரபரப்பு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 47 கோவில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செயல் அலுவலர்கள் பணியில் நீடிக்கிறார்களா என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் மொத்தம் 36 ஆயிரத்து 488 கோயில்கள், 56 திருமடங்கள், திருமடத்துடன் இணைந்தபடி 58 கோயில்கள் இருக்கின்றன. இவை தவிர, 17 சமணக் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமாக நன்செய், புன்செய், மானாவாரி என்று 4 லட்சத்து 78 ஆயிரத்து 348 ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன.

Executive officers of 47 temples in Tamil Nadu : Madras High Court important directive to Govt

இதுமட்டுமின்றி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 22,600 கட்டிடங்கள், 33,665 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதுதவிர 1 லட்சத்து 23 ஆயிரத்து 729 பேருக்கு விவசாய நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. வாடகை மூலம் மட்டும் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஆண்டுக்கு ரூ.58.68 கோடி வருவாய் கிடைப்பபதாக கூறப்படுகிறது. கோயில்கள் மற்றும் கோயில் நிலங்கள் மற்றும் கட்டிடங்களை அந்தந்த கோயில்களின் செயல் அலுவலர்கள் தான் கவனித்து வருகிறார்கள். இந்த செயல் அலுவலர்களை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை நியமிக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களை நிர்வகிக்க, எந்த நியமன உத்தரவும் இல்லாமல் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி, டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், எந்த நியமன உத்தரவு இல்லாமலும், கால வரம்பு இல்லாமலும் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் உள்ள 47 கோவில்களின் பட்டியலை அளித்து அங்கு செயல் அலுவலர்கள் நியமனம் குறித்து அறநிலைய துறை ஆணையரிடம் விளக்கம் கேட்ட போது, அவர்கள் பணியில் தொடர தடையில்லை என தெரிவிக்கப்பட்டது என குற்றம் சாட்டப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, அறங்காவலர்கள், தக்கார்கள் இருந்தாலும் செயல் அலுவலர்களை நியமிக்க முடியும், அவர்கள் ஐந்து ஆண்டுகள் பணியில் நீடிக்கும் வகையில் 2015ம் ஆண்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்றார்.

இதையடுத்து, மனுதாரர் குறிப்பிடும் 47 கோவில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செயல் அலுவலர்கள் பணியில் உள்ளனரா என்பது குறித்து விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மஅர்ச் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+