என்னாது போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா?.. இதோ புதிய கருத்து கணிப்பு
Recommended Video
சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எந்த தொகுதியில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பது குறித்து தொகுதி வாரியான புதிய கருத்து கணிப்பை இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை அனைத்து ஊடகங்களும் விவாதித்து வருகின்றன.
இந்த நிலையில் இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா நாடு முழுவதும் உள்ள லோக்சபா தொகுதி வாரியாக வெற்றி வாய்ப்பு குறித்த புதிய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன.

திமுகவுக்கு
அதன்படி திமுகவுக்கு சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை சென்ட்ரல், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என தெரிகிறது.

12 தொகுதிகள்
நேற்று முன் தினம் வெளிவந்த நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பில் திமுகவுக்கு 12 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. அதில் சென்னை சென்ட்ரல், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நீலகிரி, சேலம், ஸ்ரீபெரும்புதூர், தஞ்சை, தூத்துக்குடி ஆகிய 12 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டிருந்தது.

மாபெரும் வெற்றி
ஆனால் இன்று வந்த புதிய தகவலின்படி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருக்குமாம். இப்படியாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

கருத்து கணிப்புகள்
கருத்து கணிப்புகளை அரசியல் கட்சிகள் யாரும் நம்ப வேண்டாம் என்கின்றனர். இன்னும் சில கட்சிகளோ கருத்து கணிப்புகள் தங்களுக்கு சாதகமாக வந்தாலும் சரி பாதகமாக வந்தாலும் சரி அதை பற்றி கவலைப்படுவதில்லை என்கின்றன. எனவே பொறுத்தது பொறுத்தோம். இன்னும் ஒரே நாள்தான்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications