தாம்பரம்.. கிளாம்பாக்கம்.. எங்க போகணும்னாலும் கவலையே இல்ல! சென்னையில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள்!
சென்னை: சென்னையில் நாளை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கூடுதல் பேருந்துகளின் விவரங்கள் இங்கே!
சென்னையில் பெரும்பாலானோர் புறநகர் ரயில்களை தங்கள் அன்றாட பயணங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். அலுவலகங்கள், வேலைக்குச் செல்ல என லட்சக்கணக்கானோர் நாள்தோறும் புறநகர் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தெற்கு ரயில்வே, பயணிகளின் வசதிக்கு ஏற்ப, அதிகளவில் ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், "ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ரயில்வே தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இரு மார்க்கத்திலும் சுமார் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
ஆகையால், பொதுமக்கள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும், மெட்ரோ ரயில்களைக் கூடுதலாக இயக்கவும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது வாரமாக ரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணிக்காக இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், நாளை கூடுதலாக 150 பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தென்னக ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்ரவரி 3) காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை இயங்கும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராட்வே முதல் அண்ணா சாலை வழியாக தாம்பரம் வரை செல்லும் 18A பேருந்துகள் 60, பிராட்வே முதல் தி.நகர், எக்மோர் வழியாக தாம்பரம் செல்லும் 18G பேருந்துகள் 20, கிண்டி முதல் கிளாம்பாக்கம் வரை செல்லும் 18ACT பேருந்துகள் 10, கொருக்குப்பேட்டை முதல் தாம்பரம் வரை செல்லும் B18 பேருந்துகள் 20, பிராட்வே முதல் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் E18 பேருந்துகள் 20, தியாகராய நகர் முதல் கூடுவாஞ்சேரி வரை செல்லும் G18 பேருந்துகள் 10 என மொத்தம் 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரயில் டிக்கெட், பான் கார்டு.. இன்று முதல் மொத்தமாக மாறும் ரூல்ஸ்.. மக்களே இது தெரியாமல் இருக்காதீங்க -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications