Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துணைவேந்தர் விவகாரம்: “தாக்கல் செய்யப்பட்ட கெஜட் ஆவணமே ஜோடிக்கப்பட்டது”.. வில்சன் வைத்த பரபர வாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசிதழ் தவறானது. இந்த அரசிதழ் ஜோடிக்கப்பட்டது; உண்மையானது இல்லை. இந்த அரசிதழ் மனுதாரருக்கு எப்படி வந்தது என விசாரிக்க வேண்டும். " என பி.வில்சன் சென்னை ஐகோர்ட்டில் இன்று வாதம் வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய இந்த சட்டத்திற்கு, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டு, அண்மையில் உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Fabricated Gazette Submitted in Court Alleges P Wilson in Chennai High Court

துணைவேந்தர் நியமன அதிகாரம்

இதையடுத்து, தமிழ்நாடு அரசு துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் வெளியிட்டிருந்தது. இந்த சட்டங்களை எதிர்த்து பாஜகவை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிரதான மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்திருந்தது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

வில்சன் வாதம்

அப்போது தமிழக உயர்கல்வித் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், "துணைவேந்தர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க எந்த அவசியமும் இல்லை.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மனுதாரர், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். தடை கோரிய மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது, நியாயமற்றது, அநீதியானது. இந்த வழக்கில் இன்றே உத்தரவிடாவிட்டால் வானம் இடிந்து விழுந்து விடாது" என கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்.

தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் வில்சன், வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரினார். விசாரணையை நாளைக்கு (மே 22) தள்ளிவைக்க கோரினார். ஆனால், நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைக்க மறுப்பு தெரிவித்தனர்.

அரசிதழ் ஜோடிக்கப்பட்டது

இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் வில்சன், "இந்த இடைக்கால தடை கோரிய மனுவை விசாரித்தால், வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு செல்லாததாகி விடும். முக்கிய ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. நாளை இரண்டு மணி நேரம் அவகாசம் வழங்க வேண்டும். தேடுதல் குழு நியமனத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யவில்லை.

துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை வேந்தரிடம் இருந்து எடுத்து அரசுக்கு வழங்கியதை எதிர்த்து மட்டுமே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுநரை, பல்கலைக்கழக வேந்தர் என்ற நிலையில் இருந்து நீக்கவில்லை. துணைவேந்தர் நியமன அதிகாரம் மட்டுமே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசிதழ் தவறானது. இந்த அரசிதழ் ஜோடிக்கப்பட்டது; உண்மையானது இல்லை. இந்த அரசிதழ் மனுதாரருக்கு எப்படி வந்தது என விசாரிக்க வேண்டும். அவசரமாக விசாரிக்க வேண்டும் என எந்த காரணங்களும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை" என வாதிட்டார்.

இதையடுத்து, மனுதாரர் தரப்பிலும், யுஜிசி தரப்பிலும் எதிர் வாதங்கள் வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் (ஆளுநரின்) அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+