கொரோனா வைரஸ் ஜோக்ஸ்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டால் கைதா? உண்மை என்ன
சென்னை: சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பாக ஜோக்ஸ்களை பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு செய்தி பரவலாக பரப்பப்படுகிறது. அப்படி பரப்பப்டும் செய்தி முற்றிலும் உண்மை இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இப்படியாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது கொரோனா வைரஸ் தொடர்பாக ஜோக்ஸ்களை பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பேஸ்புக் அட்மினில் உள்ள நிர்வாகிகள் அதை இரண்டு நாளில் மூடிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏனெனில் அத்தகைய நகைச்சுவை துணுக்குகளை பதிவிட்டதற்காக அட்மின் மற்றும் குழு உறுப்பினர்கள் மீது சட்ட பிரிவு 68, 140 மற்றும் 188 ஐக் கொண்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியும். குரூப்பில் உள்ள யாராவது தவறாக கொரோனா வைரஸில் நகைச்சுவையாக பதிவிட்டாலும் . எல்லோரும் சிக்கலில் இருக்கக்கூடும். எனவே தேவையான நடவடிக்கைகளை எடுக்க குழு நிர்வாகிகள் எச்சரிக்கப்படுகிறார்கள் என்ற ரீதியில் செய்திகள் பரவி வருகிறது.
ஆனால் கொரோனா தொற்றுநோயைப் பற்றி நாம் அனைவரும் உணர வேண்டும். நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால், அரசாங்கம் இது போன்ற எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. இதுபோன்ற எந்த சட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து ஒரு ஆலோசனையும் இல்லை என்று அரசாங்கம் தெளிவாக கூறியுள்ளது,
அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில், போலி செய்திகளை பரப்புவதும், தொற்றுநோய் தொடர்பான பீதியை ஏற்படுத்துவதும் தண்டிக்கப்பட வேண்டியவை என்று கூறியுள்ளது. எனவே இதுபோன்ற போலி செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications