ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி பறிபோகுமா? சபாநாயகர் அப்பாவு சொன்னது என்ன தெரியுமா?
சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் விருப்பு, வெறுப்பின்றி நியாயமான முடிவை எடுப்பேன் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கடந்த 3 மாதத்திற்கும் மேலாக அதிமுக விவகாரம் தொடர்ந்து பரபரப்பாகவே இருக்கிறது. கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சபாநாயகர் அப்பாவுக்கு மனு கொடுக்கப்பட்டது. அதேபோல் ஓபிஎஸ் தரப்பிலும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதில் சபாநாயகர் அப்பாவு இதுவரை முடிவு எடுக்காமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அ.தி.மு.க ஒன்றாக இருக்க வேண்டும் என அப்பாவு அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சபாநாயகரின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து ஜெயக்குமார் கூறுகையில், சபாநாயகர் அப்பாவு அவருடைய வேலையை ஒழுங்காக பார்க்கட்டும். கட்டப் பஞ்சாயத்து ராஜா போன்ற வேலைகளைப் பார்க்க வேண்டாம். இவர் கட்சி வேலையைப் பார்க்கிறாரா? இல்லை சபாநாயகர் வேலையைப் பார்க்கிறாரா என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். அந்த மனுவை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் மாண்புமிகு சபாநாயகர் என அழைக்கப்படுவார். இல்லை என்றால் மாண்பில்லா சபாநாயகர் என்றுதான் அழைக்கப்படுவார் என்று விமர்சித்தார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் விருப்பு, வெறுப்பின்றி நியாயமான முடிவை எடுப்பேன். ஓபிஎஸ், இபிஎஸ்-ன் கடிதங்களை ஆராய்ந்து யாருக்கும் காத்திருக்காமல் முடிவு எடுப்பேன் என்று பதிலளித்துள்ளார்.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications