சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் .. 'ஆபீசர்ஸ்' முரட்டு வேலை.. விசாரித்தால் ட்விஸ்ட்
சென்னை: சென்னை மாநகராட்சியில் 'லைசென்சு' அதிகாரியாக பணியாற்றி வருபவர் லோகநாதன்.. இவர் சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் உள்ள மீன் கடையில் திடீரென்று சோதனை நடத்த சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே 3 நபர்கள் மாநகராட்சி அதிகாரிகள் என கூறிக்கொண்டு ஆய்வில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் போலி மாநகராட்சி அதிகாரிகள் 3 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் 'லைசென்சு' அதிகாரியாக 49 வயதாகும் லோகநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். லோகநாதன், சென்னை மாநகராட்சி 5-வது மண்டலம் 62-வது கோட்டத்தில் தான் 'லைசென்சு' அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சென்னை மாநகராட்சி அதிகாரி லோகநாதன், அண்மையில் சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் உள்ள மீன் கடை ஒன்றுக்கு திடீரென்று சோதனை நடத்தினார். அப்போது அந்த கடையில் ஏற்கனவே 3 நபர்கள் தங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு ஆய்வில் ஈடுபட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குறிப்பிட்ட 3 பேரும் உண்மையான அதிகாரி வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான், சிந்தாதிரிப்பேட்டை மீன் கடைக்காரரை மிரட்டி ரூ.15 ஆயிரம் பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. உண்மையான மாநகராட்சி அதிகாரி லோகநாதனை பார்த்த 3 பேரும் அங்கிருந்து நைசாக தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் 3 பேரும் போலி அதிகாரிகள் என்பது மாநகராட்சி அதிகாரி லோகநாதனுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி லோகநாதன் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் போலி அதிகாரிகள் பற்றி புகார் கொடுத்தார். உடனடியாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய போலி மாநகராட்சி அதிகாரிகளான ராயப்புரத்தை சேர்ந்த பால்ராஜ் (30), புதுப்பேட்டையை சேர்ந்த சந்திரசேகர் (37), கொருக்குப்பேட்டையை சேர்ந்த பாபு (30) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் 3 பேரும் மாநகராட்சி அதிகாரி வேடத்தில் பல்வேறு கடைக்காரர்களை மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டைகளை போலீசார் கைப்பற்றினார்கள். கைதான 3 போலி அதிகாரிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications