எழும்பூரில் 5 கோடி, மைலாப்பூரில் 3 கோடி.. யார் இந்த கமலக்கண்ணன்.. சென்னையில் இடம் வாங்குவோர் பாருங்க
சென்னை: சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் என்பவர் போலி பத்திரங்கள் தயாரித்து நிலங்களை அபகரித்து பின்னர் அவற்றின் மூலம் வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்வதில் பலே கில்லாடி ஆவார். இவரால் ஏமாந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்நிலையில் போலி பத்திரங்கள் மூலம் நிலங்களை அபகரித்து அவற்றை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி மோசடி செய்தாக புதிய வழக்கில் கமலக்கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் நிலத்தின் மதிப்பு தமிழ்நாட்டில் உள்ள எந்த நகரங்களையும் விடவும் அதிகம்.ஏன் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் நிலத்தின் மதிப்பு மிகஅதிகமாக உள்ளது. இதனால் நிலத்தின் ஆவணங்களை போலியாக உருவாக்கி மோசடியாக பத்திரப்பதிவு நடக்கின்றன. வங்கிகளில் அடமானம் வைத்து கடன் வாங்குவதும் நடக்கிறது. வங்கிகள் கோடிகளில் ஏமாந்துள்ளன.

போலி பத்திரப்பதிவு
இதேபோல் தனிநபர்களும் பத்திரப்பதிவு செய்த பின்னர் மோசடி நிலம் என்பது தெரிந்து நொந்து போய் இருக்கிறார்கள். பலர் சிறுக சிறுக சேர்த்த காசை பறிகொடுத்துவிட்டு காவல் நிலையத்திற்கு அலைந்து வருகிறார்கள். இதுபோன்ற மோசடிகளுக்கு போலியாக பத்திரப்பதிவு செய்வது தான் காரணமாக இருக்கிறது. இப்படி போலியாக பத்திரங்களை தத்ரூபமாக தயாரிப்பதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள். அவர்களின் கைவரிசை தான் மோசடிக்கு காரணமாக உள்ளது.
போலி பத்திர மோசடி மன்னன்
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 45 வயதாகும் கமலக்கண்ணன் என்பவர் போலி பத்திரங்கள் தயாரித்து நிலங்களை அபகரித்து பின்னர் அவற்றின் மூலம் வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்வதில் பலே கில்லாடியாக இருந்து வந்துள்ளார். இவரை போலி பத்திர மோசடி மன்னன் என்று அழைக்கும் அளவிற்கு கில்லாடியாக வலம் வந்துள்ளார். ஏனெனில் இவரால் ஏமாந்தவர்கள் அதிகம்.
இரண்டு புதிய வழக்குகள்
இந்த கமலக்கண்ணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஏற்கனவே இதுபோன்ற 13 மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளாரகள்.இதற்காக பலமுறை சிறைக்கு சென்று வந்துள்ளார் கமலக்கண்ணன். அண்மையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர் மீது புதிதாக 2 வழக்குகளை கமலக்கண்ணன் மீது பதிவு செய்துள்ளனர்.
மயிலாப்பூரில் மோசடி
சென்னை மயிலாப்பூரை சோ்ந்த தாராசந்த் என்பவருக்கு சொந்தமான நிலத்தை போலி பத்திரங்கள் மூலம் அபகரித்து, அந்த நிலத்தை தனியார் வங்கி ஒன்றில் அடமானம் வைத்து ரூ.3 கோடி மோசடி செய்துவிட்டார்களாம். இந்த வழக்கில் கமலக்கண்ணன் முக்கிய குற்றவாளி என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதேபோல, சோழிங்கநல்லூரில் உள்ள 12 ஆயிரம் சதுரஅடி நிலத்தை போலி பத்திரங்கள் மூலம் அபகரித்து சென்னை எழும்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் அடமானம் வைத்து ரூ.5 கோடியை சுருட்டியிருக்கிறது ஒரு கும்பல். இந்த வழக்கிலும் கமலக்கண்ணன் தான் போலி பத்திரம் தயார் செய்து கொடுத்த முக்கிய குற்றவாளி என்று கூறப்படுகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications