பிரபல நடிகர் தாமு.. காஞ்சிபுரத்தில் வைத்த "வேட்டு".. கோடம்பாக்கமே அதிருதே.. ஓ, "அந்த" நடிகரா.. சபாஷ்
சென்னை: பிரபல நடிகர் தாமு விடுத்துள்ள கோரிக்கையானது, தமிழக சினிமாவில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.. இதற்கான ஆதரவுகளும் தாமுவுக்கு பெருக தொடங்கிவிட்டன.
தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களாக, நகைச்சுவை பங்களிப்பை தந்து வருபவர் நடிகர் தாமு.. டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்றுதான் இவரை சொல்ல வேண்டும்.

டைரக்டர் பாலசந்தரின் சீடர் என்பது உட்பட சினிமாவில் இவருக்கான அங்கீகாரம் நிறைய உண்டு என்றாலும், யாரும் அறிந்திராத பல முகங்கள் தாமுவுக்கு உண்டு.
கல்வியாளர்: இவர் ஒரு கல்வி சேவையாளர்... 10 வருடத்துக்கு மேல் இந்த சேவையை செய்து வருகிறார்... சேவைசெம்மல், மாணவர் தளபதி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்விருது, சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம்-(அமெரிக்கா) டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ், "ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021" என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது உட்பட நூற்றுக்கும் அதிகமான விருதை பெற்றவர்.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் ஆலோசனையுடன், 2011 முதல் சர்வதேச பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர் பேரவையை (IPTSA) தொடங்கியவர். இது ஒரு அரசு சாரா கல்வி சேவை வழங்கும் அமைப்பு ஆகும். இளைஞர்களின் மனதில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க பாடுபட்டு வருபவர்.. கல்வியில் தரமான மாணவர்களை உருவாக்கிடவும் முயன்று வருபவர்.. இப்படிப்பட்ட சேவைகளுக்காக, டாக்டர் கலாமிடம் நேரடி பயிற்சி பெற்று பணியாற்றியவர் தான் நடிகர் தாமு..
மாணவர்கள்: தமிழகம் உட்பட, நாட்டின் ஒரு லட்சம் பேராசிரியர்கள், 30 லட்சம் பெற்றோர்களை கொண்ட தன்னுடைய அமைப்பின் மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு ஊக்கமும் பயிற்சியும் அளித்து வரும் சேவை அளப்பரியது. அதிலும், கலாமின் முக்கோணக் கல்விக் கோட்பாட்டை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியவர் தாமுதான்..
இப்போது மிக முக்கிய கோரிக்கை ஒன்றை அரசுக்கு விடுத்துள்ளார்.. சினிமாவை பார்த்துதான் பள்ளி மாணவர்கள் முதல் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாவதால் முடிந்த வரைக்கும் சினிமாவில் மது அருந்தும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளார்..
இளைய சமுதாயம்: சமீப காலமாகவே, வெளியாகும் படங்களில், தண்ணி அடிப்பது, சிகரெட் பிடிப்பது என நிறைய சீன்கள் திணித்து வைக்கப்பட்டு வருகின்றன.. அதுவும் இல்லாமல், இவைகளை பார்க்கும் இளைய சமுதாயம், கெத்து காட்டுவதாக நினைத்துக்கொண்டு, தாங்களாகவே போதை பழக்கத்திற்குள் விழுந்துவிடுகின்றனர்.. கண்ணுக்கு தெரியாமலேயே நடக்கும் இந்த செயல்பாட்டை தடுக்கவே, நடிகர் தாமு இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
காஞ்சிபுர மாவட்டத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமு கலந்துகொண்டு போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள் குறித்தும், இன்றைய சினிமா வாழ்கை பற்றியும் தாமு பேசினார்... போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, சினிமாவில் பல நல்ல விஷயங்களை எடுத்து சொன்னாலும், புகை, மது போன்ற காட்சிகளை தொடர்ந்து காட்டுகின்றனர். சினிமாவில் பயன்படுத்தப்படும் மது என்பது ஒரு வகையான குளிர்பானம் மட்டுமே. அதேபோல் அனைத்து நடிகர்களும் புகைபிடிக்கும் பழக்கம் இல்லை. அவர்கள் சிகரெட்டை உண்மையாக பிடிக்க மாட்டார்கள்.
இருந்தாலும், சினிமாக்கள் மாற வேண்டும். சினிமாவுக்கு என்ற ஒரு பொறுப்பு உள்ளது. ஆகையால் சினிமாக்களில் நடிகர், நடிகைகள் மது அருந்துவது புகை பிடிப்பது போன்ற காட்சிகளை இயக்குனர்கள் தவிர்க்க வேண்டும்.. இதனால், பள்ளி குழந்தைகள் கூட இதனை உடனே உள்வாங்கி கொண்டு போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இதனால், படிப்பிலும் சிறிது சிறிதாக மாணவர்களுக்கு நாட்டம் இல்லாமல் போகிறது.
உத்தரவாதம்: எனவே, முடிந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் மது அருந்தும் காட்சிகளை தவிர்க்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார் தாமு.. அதுமட்டுமல்ல, தான் படம் இயக்குவதாக இருந்தாலும் கண்டிப்பாக, தன்னுடைய படத்தில் இது போன்ற காட்சிகள் இடம் பெறாது என்றும் தாமு உத்தரவாதம் தந்துள்ளார்...
சமீபத்தில் லியோ படத்தின் "நா ரெடி" பாடலில் விஜய் சிகரெட் பிடித்துக்கொண்டே டான்ஸ் ஆடியிருந்தது சர்ச்சையான நிலையில் தாமு அவரை மனதில் வைத்து பேசுகிறாரா? என்று ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கேள்வி எழுப்பிவருகின்றனர். இருந்தாலும், தாமு சொல்வதில் உள்ள தவறு? தாமுவின் இந்த கோரிக்கையை அரசும் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இணையத்தில் சேர்ந்தே ஒலிக்கின்றன..!!
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications