1000 ரூபாய் மாத மாதம் வரும்.. இந்த கார்டு இருந்தாலே ரூ.5 லட்சம் பெறலாம்.. மத்திய அரசின் செம திட்டம்
சென்னை: தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் கிடைக்கும் மத்திய அரசின் இ-ஷ்ரம் திட்டம் குறித்து தெரியுமா? இந்த திட்டத்தின் பலனை பெற வேண்டுமானால், இதற்குரிய தகுதிகள் என்னென்ன? இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?
மகளிர், குழந்தைகள், ஓய்வூதியதாரர்கள், விவசாயிகள், என அனைத்து தரப்பினருமே பலன்தரக்கூடிய வகையில், மத்திய அரசு புதுபுது திட்டங்களை அறிமுகப்படுத்தி, திறன்பட செயல்படுத்தியும் வருகிறது.

வாழ்வாதாரம்: அதிலும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்காகவே, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்தகையை திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இதில் முக்கியமானதுதான் இ-ஷ்ரம் கார்டு திட்டமாகும்.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த தொழிலாளர்களுக்கு, மாத மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் திட்டம் இதுவாகும்.. ஆனால், உங்களிடம் இ-ஷ்ரம் கார்டு இருந்தால்தான் இந்த பலனை பெற முடியும். இந்த லேபர் கார்டில் 12 இலக்க எண்கள் இருக்கும்..
தொழிலாளர்கள்: இ-ஷ்ரம் போர்ட்டல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வீட்டு பணியாளர்கள் உட்பட பிற தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் அட்டை கார்டு மூலம் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இ-ஷ்ரம் கார்டுக்கான தகுதியான பதிவுகளை 30 பரந்த வணிகத்துறைகள் மற்றும் சுமார் 400 தொழில்களின் கீழ் e-Shram போர்ட்டலில் பதிவு செய்யலாம்.
இந்த இ-ஷ்ரம் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் நிதியுதவி வங்கிக் கணக்கில் வந்து சேரும். குறிப்பாக, ரூ. 2 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு கிடைக்கும்... அதேபோல, இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை விபத்து காப்பீடு வசதி கிடைக்கும். விபத்தில் தொழிலாளி இறந்தால் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். விபத்தில் தொழிலாளி ஊனமுற்றால் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்...
அடல் பென்சன்: அதேபோல, அடல் பென்சன் யோஜனா உள்ளிட்ட அரசின் திட்டங்களை பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மாதம் 3,000 ரூபாய் பென்சன் பெறலாம். வீடு கட்ட நிதியுதவி தரப்படுகிறது.. தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.. அதுமட்டுமல்ல, பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் மகள்களின் திருமணம் முதல் மருத்துவ சிகிச்சைகள் வரை அனைத்துமே இதில் உள்ளன.
இந்த இ-ஷ்ரம் கார்டினை நீங்கள் பெற வேண்டுமானால், இதற்கு ஒருசில தகுதிகள் அவசியமாகிறது.. அதன்படி, அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்கள் இந்த கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் தொழிலாளி, இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும்.
முக்கிய ஆவணங்கள்: இ-ஷ்ரம் கார்டு பெற வேண்டுமானால், முக்கிய ஆவணங்கள் சில தேவை.,.. விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பர், வங்கி பாஸ்புக் போன்றவை தேவைப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது: இ-ஷ்ரம் கார்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட தகுதி உள்ள தொழிலாளர்கள் இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். E-Shram கார்டுக்கு விண்ணப்பிக்க, eshram.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். பிறகு அந்த வெப்சைட்டிலிருந்து விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து அருகிலுள்ள தொழிலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை வெப்சைட்டில் பதிவு செய்ய முடியாவிட்டால், அரசு இ-சேவை மையம் அல்லது CSC மையத்திற்குச் சென்று பதிவு செய்யலாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications