Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கிக் கடன் வேணுமா? வந்தது பெரிய அறிவிப்பு.. "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் அதிரடி.. தேதி பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுயதொழில் தொடங்க விரும்புவோர் வங்கிக் கடன் பெற, "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம்களில் பதிவு செய்யலாம் என்ற மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு "மக்களுடன் முதல்வர்" என்ற புதியதிட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.. இந்த திட்டத்தின் மூலம் பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Fantastic Scheme makkaludan mudhalvar by Tamil nadu Government and apply for self employment loan for Chennai People

மக்களுடன் முதல்வர்: மக்களின் தேவைகளை நுணுக்கமாக கவனித்து, அதற்குரிய தீர்வுகளை வழங்குவதில் ஈடற்ற அரசாகத் திகழும் நம் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பாதையில் மேலும் ஒரு மைல் கல்லாக "மக்களுடன் முதல்வர்" திட்டம் உருவாகி இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலினும் இந்த திட்டம் குறித்து பெருமிதம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த திட்டத்தின் ஒருபகுதியாக, "சுயதொழில் தொடங்க விரும்புவோர் வங்கிக் கடன் பெற, சென்னையில் ஜனவரி 27-ம் தேதி வரை நடைபெறும் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம்களில் பதிவு செய்யலாம்" என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை கலெக்டர்: அந்த அறிவிப்பில், "சென்னை மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், மண்டல இணை இயக்குநர் அலுவலகம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்குதல் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளையோரும், பொதுமக்களும், புகைப்படம், மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விலைப்பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை ஆகியஆவணங்களுடன் வந்து, மண்டல இணை இயக்குநர் அலுவலர்கள் மூலமாக இணைய தளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

அறிவிப்பு: கடன் திட்ட விண்ணப்பம் உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டு கடன் பெற்று தொழில் நிறுவனம் தொடங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ஜனவரி 27-ம் தேதி வரை நடைபெறும் "மக்களுடன் முதல்வர்" திட்டமுகாம்களில் பங்கேற்று, தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+