விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து! தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் இன்று போராட்டம்
சென்னை: தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து இன்று 24 மாவட்டங்களில் அரசுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக 11 கிராமங்களில் 3200 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கியது. விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சித்த தமிழக அரசை எதிர்த்து 161 நாட்கள் அமைதியான வழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னைக்கு வந்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஒரு நாள் அடையாள போராட்டத்தையும் விவசாயிகள் நடத்தினர். இந்த நிலையில் அவர்களுடைய போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய 20 விவசாயிகளையு்ம கைது செய்தனர். இவர்களில் 7 பேர் மீது திடீரென குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. இதற்கு கண்டனங்கள் எழுந்தன. கடந்த 18ஆம் தேதி சட்டசபை சிறப்பு கூட்டம் நடக்கவுள்ள நிலையில் விவசாயிகள் பிரச்சினையை பெரிதாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.
அப்போது விவசாயிகள் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழான நடவடிக்கையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. எனினும் விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து இன்று 100-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் போராட்டம் நடத்துகிறார்கள். இதற்காக விவசாயிகள் போராட்ட குழுவை உருவாக்கி உள்ளனர். இந்த போராட்ட குழு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அது போல் வரும் 29ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications