கோதுமை மாவில் மகளின் உருவ பொம்மை செய்து.. காதலனுடன் ஓடிய கவிதாவுக்கு அப்பா தந்த மறக்க முடியாத பரிசு
சென்னை: வடமாநிலங்களில், காதல் தொடர்புகளை பெரும்பாலும் குடும்பமும் சமூகமும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இங்கு பழமையான நம்பிக்கைகள், குடும்ப மரபுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.. இதற்கெல்லாம் சாதி, மத விதிகளும் அடித்தளமாக உள்ளன.. இதோ ஒரு இளம்பெண் காதலித்துள்ளார். இதனால் அந்த குடும்பம் மேற்கொண்ட சம்பவங்களை பாருங்கள்.
மத்திய பிரதேசத்தின் விதிஷா என்ற பகுதியை சேர்ந்தவர் 23 வயது பெண் கவிதா. சமீபத்தில் இவர் காணாமல் போனார். அவரது குடும்பத்தினரும், சொந்தக்காரர்களும் கவிதாவை காணாமல் எங்கெங்கோ தேடினார்கள்.. ஆனால் எங்குமே அவரை கண்டுபிடிக்க முடியவில்லை..

கவிதாவின் காதல்
அப்போதுதான் கவிதா, இளைஞர் ஒருவர் காதலித்து வந்த நிலையில், அவரையே ரகசியமாக திருமணம் செய்துள்ளது பெற்றோருக்கு தெரியவந்தது.
இதைக் கேட்ட குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.. மகளின் இந்த முடிவால் குடும்பமே சோகம், குழப்பம், துயரத்தில் ஆழ்ந்து போயின.. மகளின் முடிவை அவர்களால் எக்காரணம் கொண்டும் ஏற்க முடியவில்லை.. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தையும் அவர்களால் சமாளிக்க முடியவில்லை.
கவிதா - கோதுமை மாவு
இறுதியில், கவிதாவை தங்களது மகளாகவே அவர்களால் பாவிக்க முடியவில்லை.. திருமணமாகி சென்ற தங்களுடைய மகள், இறந்ததற்கு சமம் என்று முடிவு செய்தார்கள். எனவே தங்கள் மகள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மேலும், அவருக்கு அடையாளப்பூர்வமாக ஈமச்சடங்குகளை செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக, கவிதாவின் உருவத்தை மாவினால் உருவாக்கினார்கள்.. பாரம்பரிய முறையில் இறுதிசடங்குகள் அனைத்தையும் செய்தனர்.. அந்த உருவ பொம்மையை ஊர்வலத்தில் வைத்து, ஊர் முழுவதும் கொண்டு சென்றனர். ஊர்வலம் முடிந்த பிறகு, உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது. இது பாரம்பரிய முறையில் செய்யப்பட்ட இறுதிசடங்கின் ஒரு பகுதியாகும்.
உருவ பொம்மை - அப்பா
மகளுக்கு இறுதி சடங்கு செய்தது குறித்து கவிதாவின் அப்பா ராம்பாபு குஷ்வாஹா செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "மகளின் முடிவால் எங்கள் குடும்பம் முற்றிலும் உடைந்துவிட்டது. இது என் வாழ்க்கையின் மிகவும் வேதனையான தருணம். எங்கள் வேதனையை இப்படி இறுதிச்சடங்கு செய்து சிறிதளவு போக்கி கொண்டுள்ளோம்" என்று கண்ணீருடன் சொன்னார்.
இந்த ஈமச்சடங்கு சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. கவிதாவின் உருவ பொம்மையை இறுதி ஊர்வலமாக கொண்டு சென்று தீ மூட்டிய காட்சிகளும் சோஷியல் மீடியாவில் வீடியோவாக பரவி வருகிறது.. இதை பார்த்து நெட்டிசன்கள் கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. காதலுக்கு இப்படியொரு எதிர்ப்பா? இவர்கள் எல்லாம் எப்போது மாற போகிறார்கள்? என்று கேட்டு கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications