சிறையில் மரணமடைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்தி ஜூலை 29-ல் மதுரை வருகை
சென்னை: எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே மரணம் அடைந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் அஸ்தி வரும் 29-ந் தேதி மதுரைக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது,
2018 ஜனவரி 1-ல் மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு காரணமே 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் சமூக செயற்பாட்டாளர்கள், இடதுசாரிகள் பேசியதுதான் என்பது தேசிய புலனாய்வு ஏஜென்சியின் குற்றச்சாட்டு.

இதனையடுத்து 83 வயது தமிழகப் பாதிரியார் ஸ்டேன் சுவாமி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பாதுகாப்பு சட்டங்கள் பாய்ந்தன.
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தமக்கு ஜாமீன் கோரி ஸ்டேன் சுவாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. பின்னர் சிறையில் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்டேன் சுவாமி மரணம் அடைந்தார்.
பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஸ்டேன் சுவாமியின் அஸ்தி வரும் 29-ந் தேதி மதுரைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
Recommended Video
மதுரை தூய மரியன்னை பேராலய வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஸ்டேன் சுவாமியின் அஸ்தி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட உள்ளது என்று மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications