என்ன நடந்தது.. சென்னையில் பாத்திமா தந்தையிடம் 4 மணி நேரம் விசாரித்த குற்றப்பிரிவு போலீஸ்
Recommended Video
சென்னை: ஐஐடி மாணவி, பாத்திமா தற்கொலை வழக்கு தொடர்பாக, அவரது தந்தை அப்துல் லத்தீப்பிடம், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 மணி நேரத்திற்கும் மேலாக, விசாரணை நடத்தியுள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கிளி கொல்லூர் பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் அப்துல் லத்தீப். இவர் மகள் பாத்திமா லத்தீப்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் முதுநிலை முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த 8ம் தேதி பாத்திமா, தான் தங்கியிருந்த விடுதி அறையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பேராசிரியர்
இதுகுறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் அப்போது தெரிவித்தனர். ஆனால் பாத்திமாவின் செல்போனில் அவர் தற்கொலைக்கு ஐஐடியில் பணியாற்றும் இணை பேராசிரியர், சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர்.

போலீஸ் விசாரணை
இதையடுத்து, இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. எனவே, இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் மெக்லினா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கேரள இல்லத்தில் பாத்திமாவின் தந்தை லத்தீப்பிடம் இன்று காலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணை
அப்போது ஐஐடியில் பாத்திமாவுக்கு நடைபெற்றதாக கூறப்படும் துன்புறுத்தல் பற்றி முன்பே தந்தையிடம் ஏதாவது தகவல் தெரிவித்தாரா, அல்லது தந்தைக்கு அது தொடர்பாக வேறு வகையில் ஏதாவது தகவல் கிடைத்ததா? இது குறித்து யாரிடமாவது புகார் அளிக்கப்பட்டதா? என்பது தொடர்பாக அவரிடம் போலீசார் விபரம் கேட்டு உள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் பாத்திமா தந்தை
சுமார் 4 மணி நேரம், இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. இதையடுத்து பாத்திமாவின் சகோதரரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, நேற்று சென்னை வந்திருந்த அப்துல் லத்தீப், தமிழக டிஜிபி திரிபாதியையும், பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், சந்தித்து பாத்திமா வழக்கில், விரைந்து, நீதி கிடைக்க வழி ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications