நம்ம லெவல் என்ன.. நாம் போய் அங்கே நிற்கலாமா? தேமுதிகவால் அதிமுக சீனியர்கள் அப்செட்.. ஏன்?
சென்னை: அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வருகின்றன. இந்த பேச்சுகளுக்கு இடையில் அதிமுக சீனியர்கள் சிலர் அப்செட்டில் இருக்கிறார்கள்.
மொத்தமாக 10 தொகுதிகள் கேட்ட தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்க அதிமுக. திட்டமிட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகின்றன. இது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

2024 லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக ஆலோசனை செய்து வருகிறதாம். அதிமுகவிடம் கூட்டணி தொடர்பாக நாங்கள் பேசவில்லை என்று தேமுதிக வெளிப்படையாக மறுத்தாலும், திரைமறைவாக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறதாம் .
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தலைவர்கள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லம் தேடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அரைமணிநேரம் வரை இந்த சந்திப்பு நடந்தது. ஆனால் இதில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல் பிரேமலதாவும் அதிமுக கூட்டணியில் இணைய சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதுபற்றிய விபரம் எதுவும் வெளியாகவில்லை. ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. தேமுதிக-அதிமுக தலைவர்கள் இடையேயான சந்திப்பு என்பது மொத்தம் அரை மணிநேரம் வரை நடந்துள்ளது.
அப்செட்: ஆனால் அதே சமயம் அதிமுக சீனியர்கள் சிலர் இதனால் கடுமையாக அப்செட் ஆகி உள்ளனராம். நம்ம வாக்கு வங்கி என்ன.. அவங்க வாக்கு வங்கி என்ன? ஏன் நாம் போய் தேமுதிகவை தேடி செல்ல வேண்டும். அவர்கள் தானே நம்மை தேடி வர வேண்டும்.
இப்போது விஜயகாந்தும் இல்லை.. அவர் இருந்து போய் பார்த்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம். இதை எப்படி ஏற்றுக்கொள்வது என்று அதிமுக சீனியர் லீடர்ஸ் சிலர் புலம்பி வருகின்றனராம்.
அதிமுக கூட்டணி: கடந்த லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருந்தது. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி மேலும் கரைந்தது. பாமக முதலில் கூட்டணியில் இருந்து வெளியேறியது.
அதிமுக ஆலோசனை: இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனைகளை அதிமுக தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி உள்ளது. லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பாக நேற்று முதல்நாள் ஆலோசனை செய்யப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை செய்தது.
கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை செய்தனர். அதாவது யாருடன் கூட்டணி வைக்கலாம்.. யாருடன் கூட்டணி வைக்க கூடாது.. எத்தனை இடங்கள் கொடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.
யாரும் பங்கேற்கவில்லை: ஆனால் லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது வேறு கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. கூட்டணியில் இடம் கேட்க பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சி வரை எதுவும் வரவில்லை.
முக்கியமாக பாமக, தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக அதிமுகவிடம் செல்லவில்லை.
இந்த நிலையில்தான் பாஜக மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது
இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வந்தன. ஆனால் இது எதுவும் பலன் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணி: பாஜகவுடன் கூட்டணி சேராத பட்சத்தில் 2024 லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக ஆலோசனை செய்து வருகிறதாம். அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மொத்தமாக 10 தொகுதிகள் கேட்ட தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்க அதிமுக. திட்டமிட்டுள்ளதாம்.
திரைமறைவு பேச்சுவார்த்தையில் கிட்டத்தட்ட கூட்டணி உறுதியாகிவிட்டது என்கிறார்கள். அதே சமயம் ஒரே ஒரு ராஜ்ய சபா தொகுதியை கேட்க தேமுதிக முடிவு செய்துள்ளதாம். பொதுவாக தேமுதிக அதிக இடங்களை கேட்பது வழக்கம். ஆனால் இந்த முறை.. இடங்களை குறைவாக கேட்டு...ஒரு ராஜ்ய சபா சீட் கண்டிப்பாக வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறதாம். ஆனால் அதிமுக இன்னும் இதை ஏற்காத நிலையில் கூட்டணி இறுதி ஆவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாம்.
தேமுதிகவின் இந்த முடிவு பாஜகவிற்கு அதிர்ச்சியாக மாறி உள்ளது. தேமுதிக இல்லாத காரணத்தால் பாஜகவால் பெரிய கூட்டணியை உருவாக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications