வட சென்னை அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. மின் உற்பத்தி பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மீஞ்சூர் அடுத்து அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஜெனரேட்டர் ட்ரான்ஸ்பார்மரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவட்டும் இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்ட்டு வருகிறது. இங்கு இரண்டாவது யூனிட்டில் இரண்டாவது அலகில் உள்ள ஜெனரேட்டர் செயல்பட்டு டிரான்ஸ்பார்மருக்கு மின் கடத்தப்பட்டு தேவையான அளவிற்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

fire-accident-in-north-chennai-thermal-power-station-power-production-is-affected

இந்நிலையில் ஜெனரேட்டரின் டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அனல் மின் நிலையத்தில் உள்ள தீயணைப்பு படை வீரர்களும் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரண்டாவது யூனிட் இரண்டாவது அலகுகளில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 9 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஒரு மணி நேரம் போராடி தீயை தீ அணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+