சூறாவளி காற்று.. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்.. எச்சரிக்கும் மீன்வளத்துறை!
சென்னை: இன்று முதல் 12ம் தேதி வரை கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், தற்போது வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக 12ம் தேதியன்று வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். அதனைத்தொடர்ந்து நாளை முதல் 13ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளி காற்று
இதனிடையே இன்று முதல் 12ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள் தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.

கன்னியாகுமரி மீனவர்கள்
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை சார்பாக சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைபடகு மீனவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இன்று முதல் 12ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன்பிடித்து வரும் மீனவர்கள் கரைக்கு வேகமாக திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை எச்சரிக்கை
இதனால் இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் நேற்று முதலே மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications