தல தரிசனம்.. ஒரு வழியாக சேப்பாக்கம் மைதானம் வந்த தோனி.. சென்னையை அதிரவிட்ட சிஎஸ்கே ரசிகர்கள்!
சென்னை: சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான தோனி இந்த சீசனில் முதல்முறையாக சேப்பாக்கம் மைதானம் வந்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடும் கடைசி போட்டி என்பதால், டீம் புகைப்படம் எடுக்க வந்தார். அப்போது சிஎஸ்கே ரசிகர்கள் ஒட்டுமொத்த சேப்பாக்கம் மைதானத்தையும் அதிரவிட்டனர்.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த ஐபிஎல் சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி விளையாடும் கடைசி போட்டி இதுவாகும். இதனால் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான தோனி களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆனால் டாஸின் போதே தோனி களமிறங்க மாட்டார் என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அறிவித்தார். இந்த சீசனில் தோனி இதுவரை ஒரு இன்னிங்ஸில் கூட சிஎஸ்கே அணிக்காக விளையாடவில்லை. அதேபோல் போட்டியின் போது தோனி மைதானத்திற்கு வருவதை தவிர்த்தார். அது சிஎஸ்கே அணி மீது ஏராளமான அழுத்தத்தை உருவாக்கும் என்று கருதி, அந்த முடிவினை எடுத்தார்.
இதனால் போட்டி நடக்கும் போது கூட தோனி ஹோட்டலிலேயே இருந்தார். சிஎஸ்கே அணி மற்ற மாநிலங்களுக்கு சென்று விளையாடும் போது கூட தோனி பயணிக்கவில்லை. இதனால் இந்த சீசனில் தோனியின் புகைப்படங்கள் மட்டுமே ரசிகர்களுக்கு வெளி வந்தது. இதனால் ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியிலாவது தோனி தரிசனம் கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர்.
அதற்கேற்ப சிஎஸ்கே அணி முதல் பேட்டிங் ஆடியது. சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை சேர்த்தது. முதல் இன்னிங்ஸ்க்கு பின் சிஎஸ்கே அணி வீரர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். அதற்காக ஹோட்டலில் இருந்த தோனி சேப்பாக்கம் மைதானம் வந்தார். தோனி சிஎஸ்கே அணியின் மஞ்சள் ஜெர்சி அணிந்து களமிறங்கிய போது, ஒட்டுமொத்த மைதானமும் அதிரத் தொடங்கியது.
தோனியை கண்ட ரசிகர்கள் பலரும் ஆரவாரம் மேற்கொண்டனர். ரசிகர்களின் உற்சாகத்தை கண்ட தோனி, அங்கிருந்து சிரித்து கொண்டே வெளியேறினார். இதன்பின் தோனி மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பிவிட்டதாக தெரிய வந்துள்ளது. ஒரு வழியாக சேப்பாக்கம் மைதானத்தில் தல தரிசனம் கிடைத்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications