ஒற்றை தலைமை என்ற விவாதமே இல்லை.. 5 தீர்மானங்களுடன் அதிமுக கூட்டம் நிறைவு
அதிமுக கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Recommended Video
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை கழகத்தில் நடந்து முடிந்தது. இதில், மிக முக்கியமாக 5 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை என ஒன்றரை மணி நேரம் ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்தது.

இந்த கூட்டத்தில், மக்களவை தேர்தல் தோல்வி குறித்தும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கூட்டத்தின் இறுதியில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற உறுதியேற்பது, உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவை இவைகள்தான்:
தீர்மானம் 1: நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கும், கழக தலைமையில் அமைந்த கூட்டணியின் வேட்பாளர்களுக்கும், வாக்களித்த தமிழக வாக்காள பெருமக்களுக்கு இந்த கூட்டம் நன்றி தெரிவித்து கொள்கிறது.
தீர்மானம் 2: அதிமுக சார்பிலும், கூட்டணி கட்சி சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், மன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் அரும்பணியாற்றிய நிர்வாகிகள், உடன்பிறப்புகள், கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள், தோழமை கட்சி தலைவர்கள், தொண்டர்கள், மற்றும் ஆதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் இந்த கூட்டம் நன்றி தெரிவித்து கொள்கிறது.
தீர்மானம் 3: நாடாளுமன்ற மக்களை பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை அமைத்திருக்கும் பாஜக, இந்திய தேசத்தின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அதிமுகவுக்கு அளித்தமைக்கு இந்த கூட்டம் தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறது.
தீர்மானம் 4: தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றிய அதிமுக தலைமையில் வெற்றி பெற்றதை போன்ற மகத்தான வெற்றியை பெற்றிட இந்த கூட்டம் உறுதி ஏற்கிறது. உள்ளாட்சி மன்ற தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்க இந்த கூட்டம் சூளுரைக்கிறது.
தீர்மானம் 5: தமிழ்நாட்டின் தன்னிகரில்லா இயக்கமான அதிமுக கழக நிறுவன தலைவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வகுத்து தந்த ஏழை, எளியோருக்கம், தாய்க்குலத்திற்கும் தொண்டாற்றும் தூய அரசியல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும், இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் வழியில் மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு தமிழக மக்கள் எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ்ந்திடும் வண்ணம் செயல்படவும் இந்த கூட்டம் உறுதி ஏற்கிறது"
இவ்வாறு அந்த தீர்மானங்கள் நிறைவேறி உள்ளன. எனவே ஒற்றை தலைமை குறித்து வேறு எதுவும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications