ஜெயில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை முதல்வராக்கிய பாத்திமா பீவி.. அதிரடியாக ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்!
சென்னை: தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி கேரளாவில் இன்று வயது முதுமை காரணமாக காலமானார். தமிழ்நாட்டில் ஆளுநராக பதவி வகித்த காலத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி மத்திய அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர் பாத்திமா பீவி.
தமிழ்நாட்டில் 1996-2001-ல் திமுக ஆட்சிக் காலம நடைபெற்றது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் வேண்டுகோள் மத்திய அரசு, பாத்திமா பீவியை தமிழ்நாடு ஆளுநராக நியமித்தது. நாட்டின் உச்சநீதிமன்றத்தின் முதலாவது பெண் நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் என பெருமிதங்களுடன் தமிழ்நாடு ஆளுநராகவும் பதவி ஏற்றார் பாத்திமா பீவி.

கருணாநிதியுடன் மோதல்: தமிழ்நாட்டில் முதவ்லராக இருந்த கருணாநிதியின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் பல்வேறு பிரச்சனைகளில் முரண்பாடுகள் வெடித்தன. இதனால் முதல்வர்- ஆளுநர் இடையே மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து 2001 சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
தகுதி இழந்த ஜெயலலிதா: அத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை. டான்சி வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றார் ஜெயலலிதா. இதனால் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியாத நிலை இருந்தது. ஆனால் புவனகிரி, கிருஷ்ணகிரி, ஆண்டிபட்டி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற காரணத்தால், தேர்தலில் போட்டியிட தகுதியில்லை என்று கூறி அவரது வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். அந்த தேர்தலில் அதிமுகதான் அமோக வெற்றியஇப் பெற்றது.
பதவி பிரமாணம் செய்து வைத்த பாத்திமா பீவி: அப்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி தேர்தலிலேயே போட்டியிட முடியாத ஜெயலலிதாவை சட்டசபை குழு தலைவராக அதாவது முதல்வராக தேர்ந்தெடுத்தனர். இதனை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்திருக்க வேண்டிய ஆளுநர் பாத்திமா பீவி, ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற, தேர்தலிலேயே போட்டியிட தகுதியில்லாத நிலையில் இருந்த வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இது மிகக் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி, " ஊழல் வழக்கில் தண்டனை பெற்று தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படாதவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது சட்டப்படி குற்றம் எனவும், எனவே ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்" என வலியுறுத்தி இருந்தார். ஆனால் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இதனை நிராகரித்துவிட்டார்.
உச்சநீதிமன்றம் குட்டு: இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில், ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பாத்திமா பீவி பதவி பிரமாணம் செய்து வைத்ததை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பாத்திமா பீவி முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என அதிரடி தீர்ப்பளித்தது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலகினார். அந்த தருணத்தில் தற்காலிக முதல்வராக பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது மிக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார் பாத்திமா பீவி.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications