சென்னையில் 160 இடங்களில் தேங்கிய வெள்ளம்..எந்தெந்த இடங்களில் பாதிப்பு..புகார் கூற தொலைபேசி எண்
சென்னை: நேற்றிரவு தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சென்னையில் பல சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள கல்லூரிக்கு செல்பவர்களும், அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலைகளில் தேங்கியுள்ள வெள்ள நீரினால் அலுவலகத்திற்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் புகார் கூற கட்டணமில்லா தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் நள்ளிரவு தொடங்கிய கனமழை தற்போது வரை நீடித்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சென்னை தரமணியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல் ஜமீன் கொரொஅட்டூர் பகுதியில், 8.4 செ.மீ. மழையும், பூந்தமல்லியில் 7.4 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செம்.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இதேபோல் புறநகர் பகுதிகளான கிளம்பாக்கத்தில் 17 மி.மீ. மழையும் தாம்பரத்தில் 14 மி.மீ. மழையும், மாமல்லபுரத்தில் 8 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மட்டுமல்லாது போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பிரதான சாலைகளிலும் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலை 9 மணியில் இருந்து அலுவலகம் மற்றும் வேளைக்கு செல்வோர் சாலை மார்க்கமாக செல்லும் நிலையில், இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் போக்குவரத்து இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மழை காரணமாக வாகனங்கள் மெதுவாக இயக்கப்படும் நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வடசென்னையில் புளியந்தோப்பு பகுதியில் 3 அடி வரை சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதே போல தென் சென்னை பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் கத்திப்பாரா சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், தூய்மை பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். மழைநீத் தேங்குவது தொடர்பாக புகார்கள் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் 160 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
பெரம்பூர் முரசொலி மாறன் சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ளநீரில் வாகனங்கள் சிக்கியுள்ளன. இதனால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் 1913 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் கூறலாம். கழிவு நீர் அகற்ற மாநகராட்சி தொலைபேசி எண் 044 4567 4567 அறிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொடர்பான புகார்களை 1916 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications