ஜொமாட்டோ மீது உரிமையாளர் புகார்.. சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையில் 3500 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்!
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள சேலம் ஆர் ஆர் பிரியாணி தயாரிக்கும் இடத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி ஆய்வின் மூலமாக 3500 கிலோ அளவிலான கெட்டுப்போன இறைச்சிகளை கைப்பற்றியுள்ளனர்.
Recommended Video
ஆன்லைனில் ஆர்டர் செய்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியாவில் இருந்து வாங்கப்பட்ட இறைச்சிகள் தரமற்றதாக இருந்ததை அடுத்து ஆர்.ஆர்.பிரியாணி உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
விலை கொடுத்து வாங்கப்பட்ட இறைச்சி சரியான முறையில் வழங்கப்படவில்லை என்று வந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 3500 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஆய்வு
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சதீஷ் : சேலம் ஆர்ஆர் உணவகம் அளித்த புகாரின் அடிப்படையில் இறைச்சிகள் அனைத்தையுமே கைப்பற்றி விட்டோம். கெட்டுப்போன இறைச்சி குறித்து தெரிந்து கொள்ள கால்நடை மருத்துவமனைக்கு மாதிரிகளை அனுப்பி வைக்க உள்ளோம்.

ஜொமாட்டோ
ஆர்டர் டெலிவரி செய்த ஜொமாட்டோ நிறுவனம் தான் இதற்கு பதில் கூற வேண்டும். தொடர்ந்து கர்நாடகாவில் எந்த இடத்தில் இந்த இறைச்சி வெட்டப்பட்டது, எந்த நிறுவனம் மூலம் பெறப்பட்டது என்ற முழு விசாரணையை மேற்கொள்ள உள்ளோம். ப்ரீசரில் வைத்த இறைச்சிகளே கெட்டு போயிற்று என்றால் எப்படி?

எந்த உணவகங்கள்
இந்த இறைச்சி வேறு எந்த மாதிரியான உணவகங்களுக்கு சென்றன என்பது குறித்து விசாரிப்போம். எதுவாக இருந்தாலும் ஆய்வறிக்கைக்கு பிறகே உண்மை தெரியவரும். ஆனால் சேலம் ஆர் ஆர் பிரியாணி உரிமையாளர் புகாரின் பேரில் நாங்கள் அங்கு சென்ற போது இறைச்சிகளிலிருந்து அழுகிய வாடை வீசியது என்றார்.

பிரியாணி உணவு
ஆரணியில் கெட்டு போன இறைச்சியால் செய்யப்பட்ட உணவை சாப்பிட்ட சிறுமி பலி, கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலி உள்ளிட்ட செய்திகள் வெளியான நிலையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆங்காங்கே அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த சோதனையில் தவறு இருப்பது கண்டறியப்பட்டால் அந்த உணவகம் மீது நடவடிக்கையும் பாய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. காசுக்கே சாப்பாடு போட்டாலும் பசியாற உணவு கொடுப்பவர்களை தெய்வமாக பார்க்கும் நிலையில் இது போன்று அதிக பேராசைக்காக மக்களின் உயிருடன் விளையாடும் போக்கை உணவகங்களும் அதற்கு இறைச்சிகளை சப்ளை செய்வோரும் கைவிட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications