அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் உருவான புரேவி புயலானது இலங்கையின் திருகோணமலை- பருத்தித் துறை இடையே முல்லைத் தீவு அருகே கரையை கடக்கிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் வளசரவாக்கம், ராமபுரம், போரூர், முகப்பேர், அண்ணாநகர், செங்குன்றம், புழல் பகுதியிலும் பரவலாக மழை பெய்கிறது. அயனாவரம், அசோக் நகர், மேற்கு மாம்பலம், வண்ணாரப்பேட்டையிலும் மழை பெய்கிறது.

மீனம்பாக்கம்

மீனம்பாக்கம்

அது போல் பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, கோடம்பாக்கம், எம்ஆர்சி நகர் பகுதிகளிலும் வேளச்சேரி, தரமணி பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்கிறது. போரூர், மதுரவாயல், ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இடியுடன் கூடிய கனமழை

இடியுடன் கூடிய கனமழை

இந்த நிலையில் குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் புயல் மழை பெய்து வருகிறது. அது போல் தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை , நாகை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது.

தண்ணீர்

தண்ணீர்

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அது போல் காரைக்காலில் 6 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

தண்ணீர்

தண்ணீர்

ஏற்கெனவே நிவர் புயலால் சென்னை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் சென்னை புறநகர் பகுதிகளில் நிவரால் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+